Friday, May 31, 2013

பெருமை படுங்கள் நீங்கள் தமிழன் என்று!






குட்டை உருவமும், நீண்ட தாடியும் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம். 
முதலில் யாரிந்த சாமியார் என்பதை தெரிவித்து விடுகிறோம். இவர் தாங்க "அகத்தியர்". ஒரு சிலர் படத்தைப் பார்த்ததும் யூகித்திருப்பீர்கள்! சரி இவருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்பதைப் பார்க்கலாம்.

தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் பழங்கால அறிவியல் தொழில் நுட்பத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகளை நாம் தந்திருந்தோம். சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பது தான் இந்த பதிவு.

"சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருனசங்கியதம்"

புரியலை நா விட்டுடுங்க..., நீங்கள் இப்போது படித்த வரிகள் பைந்தமிழ் முனிவர் அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் பொக்கிடத்தின் ஒரு பகுதி.
இதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம்,

"ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி, இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருனசக்தியைப் பெறலாம்"

மித்ரவருனசக்தியா அப்படினா என்ன? சித்தர்கள் தவமிருந்து கிடைக்கிற சக்தியா?

Rao Saheb Krishnaji Vajhe (சுருக்கமாய் கிருஷ்ணாஜி) 1891 ஆம் ஆண்டு புனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, தமது துறை சார்ந்த விடயங்களை பண்டைய கால படைப்புகளில் தேடலைத் தொடங்கினார். அப்போது உஜ்ஜெய்னி மாகாணத்தைச் சேர்ந்த Damodar Tryambak Joshi (சுருக்கமாய் ஜோஷி) ஜோஷியிடம் ஒரு சில பண்டைய ஆவனங்களைப் பெற்றுத் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். அது சுமார் கி.மு 1550 ஆம் ஆண்டின் ஆவணம். நாம் மேலே பார்த்த அந்த வரிகளைப் படித்த உடன் அதைப் பற்றி தெரிந்து கொள்ள சமஸ்கிருத வல்லுனரான Dr.M.C.Sahastrabuddhe (சுருக்கமாய் புத்தே) அவர்களை அணுகினார். புத்தே அப்போது நாக்புர் பல்கலைக்கழக சம்ஸ்கிருதத் துறைத் தலைவர். அவர் இதைப் படித்துப் பார்த்ததும் ஆச்சரியத்துடன் அதிர்ந்து போய் இது ஏதோ ஒரு டேனியல் செல்லைப் போன்ற மின்கலத்தின் கட்டுமானத்தைப் போன்று இருக்கிறது என்றார். சரி இதை மேலும் ஆராய வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக் கொள்ள புத்தே அதை நாக்பூரைச் சேர்ந்த பொறியியல் வல்லுனர் P.P. Hole (ஹோல்) அவர்களிடம் அதைக் கொடுத்து ஆராயச் சொன்னார். இதைக் கேட்டதும் நமது கிருஷ்ணாஜிக்கு உற்சாகம் பீறிட்டு வர அவரும் களத்தில் குதித்தார்.

ஒவ்வொன்றாய் படித்து படித்து அதில் கூறப்பட்டதைப் போன்றே தனது மின்கலத்தை வடிவமைக்கும் போது அவர் வந்து முட்டி மோதி நின்ற இடம் சிகிக்ரிவம் என்ற சொல். நாமும் கூட அதை படிக்கையில் என்ன அது என்று சற்று யோசித்திருப்போம். அவர்களும் இது என்னவாய் இருக்கும் எனத் திணரும் போது ஒரு சமஸ்கிருத அகராதியில் "மயிலின் கழுத்துப் பகுதி" என்று இருந்ததைப் பார்த்தார்கள். உடனே அவர்கள் இருவரும் பக்ஹ் என்ற ஒரு மயில் சரணாலயத்தில் தலைமைப் பொருப்பாளராய் இருந்தவரிடம் போய் ஏதாவது இறந்த மயில்கள் உள்ளதா அல்லது இங்கிருக்கும் மயில்கள் எப்போது சாகும் என கேட்க அவருக்கு கோபமே வந்துவிட்டது. பிறகு இவ்விருவரும் நிலைமையை விளக்கிக் கூற உடனே பக்ஹ் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். இருவரும் திகைப்புடன் அவரை நோக்க பக்ஹ் சொன்னார் "அது மயிலின் கழுத்து அல்ல மயிலின் கழுத்தைப் போன்ற நிறம் உள்ள பொருள்". இதைக் கேட்டதும் அவர்களுக்கு சிந்தனை முளைத்தது. ஆஹா! ஆம்! அது தான் அது!, மயிலின் கழுத்து நிறம்! அதே தான். காப்பர் சல்ஃபேட்! கண்டுபிடித்தாகிவிட்டது.

அடுத்த சில மணி நேரங்களில் மின் கலமும் தயாரானது. அந்த மின் கலத்தை ஒரு மல்டி மீட்டரை வைத்து ஆராய்ந்த போது 1.38 Open Circuit Voltage மற்றும் 23 milliampere Short Circuit Current. கிடைக்கப்பெற்றது. ஆமாம்! வெள்ளைக்காரன் Electric current என்றதை அலுப்பே இல்லாம மின்சாரம் என்று பெயர் மாற்றி பயன்படுத்தி வருகிறோமே அதற்கு நம் பாட்டன் இட்ட பெயர் மித்ரவருண சக்தி.

இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட விளக்கமுண்டு. வருணன் என்றால் தண்ணீர் என்பது நாம் அறிந்ததே, மிதரன் என்றால் சூரியன் என்று பொருள். ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் கொள்ளும். ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜனில் தான் உள்ளது. அதனால் இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க மித்ரா என்று குறிப்பிடுகிறார். தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிறித்து எடுத்தால் மாபெரும் சக்தியை நாம் பெறலாம். எனவே அவ்வாறு பெறப்பட்ட சக்தியையே மித்ரவருண சக்தி என்கிறார் அகத்தியர்.

என்னப்பா இது அந்த காலத்துல மின்சாரமா என்று கேட்கிறீர்களா? தேடுங்கள் கூகுள் தளத்தில், பாக்தாத் பேட்டரி என்று ஆங்கிலத்தில். அது மட்டும் அல்ல ஹிஸ்டரி சேனலின் "தி ஏன்ஸியண்ட் ஏலியன்ஸ்' தொட்ரைப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கக் கூடும்.

இருங்க இருங்க.., நம்ம பாட்டன் இதோட நிருத்திடல.. இன்னும் கொஞ்சம் தகவல் மட்டும் சுருக்கமாய் சொல்லி முடித்து விடுகிறோம்..

அவர் மேலும் கூறுவது, இது போல 100 கலன்களை செய்து தண்ணீரைப் பயன்படுத்தினால் அது பிராண வாயுவாகவும் ஹைட்ரஜனாகவும் பிரியும் என்கிறார். இந்த ஹைட்ரஜன் மிதக்கும் தன்மையுடையது எனவும் இதை ஒரு பையில் அடைத்தால் பறக்கப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கிறார். அது மட்டுமல்லாமல் இதே அகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால "electroplating" என்று சொல்லக் கூடிய அதே முறையை தெள்ளத் தெளிவாக விவரித்து செயற்கையாக தங்கத்திற்கு சாயம் பூசுவது எப்படி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இப்போ போடுங்க ஒரு லைக்கையும், ஷரையும்.

குறிப்பு : அகத்தியர் வாழ்ந்த காலகட்டம் குறித்த தெளிவான புள்ளி விவரம் கிடைக்கப்பெறவில்லை. சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இருந்து 3500 ஆண்டுகளுக்கு முன் வரை வெவ்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. அதனால் இந்த அறிவியல் பொக்கிடம் நிச்சயம் குறைந்தது 3500 முதல் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழனால் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறலாம்


நன்றி: நண்பர் திரு.கஜெந்திரன் (facebook)

Friday, May 24, 2013







பெர்முடா முக்கோணம்[The Bermuda Triangle] - உண்மையும் , கட்டு கதையும் !!!

நீங்கள் ஒரு வரைபடத்தில் இதைக் காண முடியாது என்றாலும், பெர்முடா முக்கோணம் உண்மையாகவே உள்ளது. கடந்த காலத்தில் நிறைய கப்பல்கள், விமானங்கள் மற்றும் மக்கள் பலரும் காணமால் போய் உள்ளனர். பல சம்பவங்களுக்கு நம்பும்படியான விளக்கம் இருந்தாலும் , அங்கு நடந்த பல சம்பவங்களுக்கும், நிகழ்வுகளுக்கும் இன்று வரை எந்த அறிவியல்ரீதியான விளக்கமும் இல்லை !

பெர்முடா முக்கோணம் மியாமி, போர்டோ ரிகோ மற்றும் பெர்முடாஸ் இடையே புளோரிடா கடற்கரையில் அமைந்துள்ளது. இது அட்லாண்டிக் பெருங்கடலில் 500 000 சதுர மைல்களை உள்ளடக்கியது. பெர்முடா முக்கோணத்தை, சாத்தானின் முக்கோணம் என்று கூட அழைப்பர் , ஏனெனில் பெர்முடாவை முற்காலத்தில் சாத்தானின் தீவு என்று அழைத்தனர் !

தீவை சுற்றிலும் பவளபாறைகள் அமைந்துள்ளதால் , பல நூற்றாண்டு காலமாக அந்த கடல் வழியை மிகவும் ஆபத்தானதாக கருதினர் கப்பலோட்டிகளும், மாலுமிகளும். பெர்முடா முக்கோணம் பற்றிய அசாதாரண நிகழ்வுகள் கிறிஸ்டோபர் கொலம்பஸ் காலத்தில் இருந்து உள்ளது . அவர் சில நேரங்களில் திசைகாட்டி தாறுமாறாக சுற்றியது என்று தனது அறிக்கையில் கூறி உள்ளார். பல பத்திரிகையாளர்கள் இந்த பகுதியில் நடந்த விபத்துக்கள் அனைத்தும் அசாதாரண விஷயங்கள் என்று நிரூபிக்க முயற்சி செய்து தோற்றனர் . சில சம்வத்தில் எந்த விதமான துப்பும் கிடைக்காமல் கூட போனது !

நன்கறியப்பட்ட சம்பவங்களில் ஒன்று அமெரிக்க கடற்படை பயிற்சி விமானம் பிளைட் 19 காணாமல் போனது !. டிசம்பர், 1945 , ஐந்து அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் வழக்கமான பயணத்தை ஃபுளோரிடா, ஃபோர்ட் லாடர்டேல்லில் இருந்து தொடங்கியது. பல வானொலி செய்திகளை அனுப்பிய பின்னர் , அந்த விமானத்தில் இருந்த 14 குழு உறுப்பினர்களும் விமானத்தோடு காணாமல் போயினர். அந்த விமானத்தை தேடி சென்ற இன்னொரு மீட்பு விமானமும் காணமல் போனது !

என்ன தவறு நடந்தது என்று முழுமையாக தெரியவில்லை.திசைகாட்டிகள் தவறான திசைகளை காட்டியது மற்றும் தெரிவுநிலை மோசமாக இருந்தது, அதனால் விமான ஓட்டி கீழே தெரியும் அடையாளங்களை வைத்து விமானத்தை செலுத்த முயற்சி செய்தார் என்பது மட்டுமே தெரியும் !

பின்னர் ஒரு திடீர் புயயலினால் வானொலி தொடர்பு இல்லாமல் போனது . கப்பல்கள் இந்த பெர்முடா முக்கோண பகுதியில் காணாமல் போயுள்ளன. மேரி செலஸ்டி, ஒரு அமெரிக்க வணிக கப்பல், 1872 ஆம் ஆண்டில் காணாமல் போனது . அந்த கப்பல் நியூயார்க்கில் இருந்து ஜெனோவாவை நோக்கி சென்று கொண்டிருத்த போது அது மாயமானது . ஆனால் பின்னர் அந்த கப்பல் , எந்த குழு உறுப்பினர்களும் இல்லாமல் ஆப்ரிக்கா கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது . மேரி செலஸ்டி கப்பல் பெர்முடா முக்கோணத்தில் பயணித்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும் , அந்த கப்பலின் பணிக்குழு என்ன ஆனது என்பது இன்று வரை புரியாத புதிரே !

ஏன் பல விமானங்கள் மற்றும் கப்பல்கள் பெர்முடா முக்கோண பகுதியில் காணாமல் போகின்றன என்பதற்கு பல கோட்பாடுகள் மற்றும் காரணங்கள் கூறப்படுகின்றன. சிலர் கூறுகின்ற காரணமானது , மிகவும் பலம் வாய்ந்த மின்காந்த புலன் [Magnetic Field] . அழிந்து போன அட்லாண்டிஸ் என்னும் தீவு தான் இந்த நிகழ்வுகளுக்கு காரணம் என்று பலர் வாதிடுகின்றனர் !. பெர்முடா முக்கோண கடலில் பலவகையான ரசாயனம் உள்ளது என்றும் , அதனால்தான் இவ்வளவு பிரச்னை என்று சில சாரார் வாதிடுகின்றனர் !

கரீபிய கடல் மிகவும் ஆபத்தானது என்றும் , அங்கு சீதோசன நிலை ஒரே மாதிரி இருப்பது கிடையாது என்றும் , கடல் மட்டம் ஒரே மாதிரி இருபது இல்லை என்றும் , திடீர் என்று பல பகுதிகளில் தாழ்வான தரைமட்டம் வரும் என்றும் . இது போன்ற பல காரணங்களை முன் வைக்கின்றனர் !!!

இந்த 20ஆம் நூற்றாண்டில் மட்டும் சுமார் 1000 பேருக்கு மேல் பெர்முடா முக்கோணத்தில் மறைந்து போகினர் !

பெர்முடா முக்கோணத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் , சம்பவங்களுக்கும் , அறிவியில்ரீதியான விளக்கம் கண்டிப்பாக இருக்கும் என்று அனைத்து விஞ்ஞானிகளும் கூறி கொண்டிருந்தாலும் , இன்று வரை அது ஒரு புரியாத புதிராகவே உள்ளது !!!


***** நன்றி: நண்பர் திரு.கஜேந்திரன் (face book)*****


Monday, May 13, 2013

ஆசை












மேகபந்தின் பணித்துளியாய்
நீந்தி செல்ல ஆசை

நீ நிற்கும் இடம் நான் மழையாய் மாறி
உன் நெஞ்சம் நெருங்க ஆசை

நீர் துளியின் ஈரமாய் உன் இதயம்
மாற்ற ஆசை

உன் இதய துடிப்பில் என் இருக்கை
இருக்க ஆசை

இருக்கும் வரைக்கும் உன் நினைவு
பறிக்க ஆசை

என் நினைவை நீ மறக்கையில் நிலத்தில் மறைய ஆசை.