Sunday, September 29, 2013

நிசப்தத்தின் சப்தம் (அத்தியாயம் 5)

குழந்தை தொடர்ந்தது, “ இன்னும் உன் அன்பும், உன் மனைவியின் அன்பும், சுற்றுபுற சூழ்நிலையின் காரணமாகவும் நான் கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்தையும் மறந்துடுவேன். அப்பறம் என் மாந்திரீக சக்தி, அதுல நான் கொடிகட்டி பறந்த காலம் கரிந்தே போய்டும்.நீ எனக்கு உதவி செஞ்சா நான் உனக்கும் உதவுவேன் என்ன சொல்லறே? என்றது.

உடனே தருண் “இல்ல... இல்ல என்னால உனக்கு help  பண்ண முடியாது. இது தப்பு. உலகத்தோட ஒத்துபோ அதுதான் நியாயம்எனவும்,

குழந்தை இனி உன்கிட்ட பேசி பலனில்லை, உன்கிட்ட சொன்னதால உன்ன அழிசாத்தான் எனக்கு நிம்மதி, இல்லைனா உன்னால என் ரகசியம் எல்லாம் வெளிய வந்திடும்”  என ஆக்ரோஷத்துடன் சொன்னது.

தருண், “ முடியாது நீ என்ன மிறட்டினாலும் நான் பயப்படமாட்டேன். நீ என்னை அழிச்சு இந்த உலகத்தோட நியதியை மாத்திறத்துக்கு முன்னாடி, நான் உன்ன அழிச்சுடறேன்.என ஆவேசத்துடன் அதன் கழுத்தை நெறிக்க முற்பட்டான்.

அப்போழுது ஏதோ ஒன்று தன் மண்டையை பலமாக தாக்கியதாய் உணர்ந்து திரும்பியவன் அதிர்ச்சியிலும் வலியிலும் உரைந்தே போனான் ஆனால் அவன் ரத்தம் மட்டும் உரையாமல் ஈரமாக்கியது அவனது கழுத்து பகுதியினை.

“சுஜா...நீயா என்னை ஏன் அடிச்சேஎன பலவீனமாய் கேட்டவன் கிட்ட்தட்ட மயக்க நிலைமைக்கு சென்று கொண்டிருந்தான்.

“ஏன்னா இப்போதைக்கு இந்த இரும்பு தடிதான் கிடச்சது எனக்கு. என்ன தைரியம் இருந்த நான் அவ்வளவு சொல்லியும் உங்க பைத்தியகாரதனத்தால், நம்ம குழந்தையை சாகடிக்க நினைப்பீங்க. இப்படிபட்ட புருஷனே எனக்கு வேண்டாம். எல்லாத்தையும்விட ஒரு தாய்க்கு அவ குழந்தைதான் முக்கியம்னு,நாளைக்கு இந்த ஊர் உங்க நிலைமையைப் பார்த்து தெரிஞ்சுக்கட்டும்.என மேலும் தாக்கிவிட்டு வேகமாக குழந்தையை தூக்கி கொண்டு வெளியே சென்றாள், குழந்தையும் அந்த கிண்டல் சிரிப்பு மாறாமல் இவனயே பார்த்துக்கொண்டு சென்றது.

எரிச்சலும் வலியாலும் “சுஜா...சுஜாதா... அது சரியில்லை....சுஜா...அது குழந்தையே இல்லைஎன கத்தலும் முனங்கலுமாக எழுந்திரிக்க முற்பட்டான்.


ஒரே கும்மிருட்டாக இருந்த்து. “என்னங்க...என்னங்க ஆச்சு?! ஏன் இப்படி ஒளரிகிட்டு இருக்கீங்க...எழுந்திரிங்க, என்ன ஆச்சு உங்களுக்குஎன லைட்டை ஆன் செய்ய, சுற்றும் முற்றும் குழந்தையை தேடினான். பின் சுஜாதாவின் குறல் அருகில் கேட்டதும் திரும்பி பார்த்தான். பிறகுதான், தான் தன் படுக்கை அறையில் உள்ளோம் என உணர்ந்து சுஜாதாவையே வெறித்து பார்த்துகொண்டிருந்தான்.

திரும்பவும் சுஜாதா அவனை நன்றாக உலுக்க, “ஓ...எல்லாம் கெட்ட கனவாஎன பெருமூச்சு ஒன்றைவிட்டான்.ஆனாலும் கழுத்திலும் தலையிலும்  உள்ள ஈரபசை பயமுறுத்த் திடுக்கிட்டு தடவி பார்க்க,
சுஜாஅதுசரி தண்ணி பாட்டில் எடுக்கும் போது டொம்முன்னு உங்க மண்டைல விழுந்து மூடி திறந்துடுச்சு, சரி எழுப்பி சொல்லலாம்னு பார்த்தா

இப்படி அலற்றீங்களே?!என சுஜா கூறவும், நிம்மதியான் புண்சிரிப்போடு “அப்பாடா எனக்கு இப்போதான் நிம்மதியா இருக்கு என அவளை அனைக்க போக, அப்போழுது சுஜாதா “ ஏய்...வேண்டாம் வேண்டாம். இப்போ நான் இரண்டு ஆளாக்கும்எனவும் பீதி நிறைந்த அவன் விழிகளுக்குள் குழந்தை அதே கிண்டல் சிரிப்புடன் கண்ணடித்தது. 


முற்றும்.

Wednesday, September 18, 2013

நிசப்தத்தின் சப்தம் (அத்தியாயம் 4)

என்ன சொன்னீங்க? நம்ம குழந்தையை போய் கொண்ணுடுவேன்னா சொன்னீங்க!?அத்திரத்துடன் கேட்டாள் சுஜாதா.
இல்...இல்ல... இல்ல சுஜா நான்... வந்து... எனக்கு எப்படி குழந்தையை சமாதனபடுத்தறதுன்னு தெரியல. அதான் என தினறி தினறி பேசி முடித்தான்.
இருந்தும் ஆவேசம் வந்தவளாய் பால் பாட்டிலுடன் வந்து நங்கென்று அவன் தலையில் வைத்து, “ இதோட இப்படி பேசுறத நிறுத்திருங்க, இல்ல நான் ராட்சசியா மாறிடுவேன்”, என்று குழந்தையை தூக்கிக்கொண்டு அப்பால் சென்றாள்.
இப்ப மட்டும் என்னவாம்என முனு முனுக்க, அதை கண் அடித்து சிரித்து வெறுப்பூடிடியது குழந்தை. இனியும் அதன் அட்டகாசம் பொறுக்காது என திட்ட்மிடலானான் தருண்.

சுஜா கடைவீதிக்கு சென்றிருந்த நேரம் பார்த்து,

“உட்காரு உன்கிட்ட பேசனும்என்றான் தருண்.

எனக்கு தூக்கம் வருது இப்போ என்னால் உட்காரமுடியாது. ஏன்னா நான் கை கொந்தே தம்பிஎன பல்லில்லா ஈரை காட்டி கேலி செய்த்து குழந்தை.

“சரி படுத்துகிட்டே பதில் சொல்லு எப்படி இருந்தாலும் எனக்கு நீ பேசற ரகசியம் தெரிஞ்சுக்கனும்என ஆவேசமுடன் கூறினான் தருண்.

இனி இவன் விடாகொண்டனாகிவிட்டான் என தெரிந்த்தும் குழந்தை,
“சரி ஆனா நார் கிட்டையும் சொல்ல கூடாது சரியா? இந்த டீலுக்கு ஓகே வா? என கிண்டல் அடித்த்து.

சாதுர்யமாக எரிச்சலை அடக்கிக்கொண்டு தருணூம், “சரி, ஓகே....ஓகே....சரி. விஷயத்துக்கு வாஎன்றான்.

அது என்னப்பா... சரி ஓகே....சரி எல்லாம் ஒண்ணுதானே?! இப்போ மாத்திட்டாங்களா என்ன? என மேலும் வெறுப்போற்ற எரிச்சலின் உச்சத்திற்கே போய்விட்டான் தருண் ஆனாலும் பல்லை கடித்துக்கொண்டு இந்த அதிசயத்தை, ரகசியத்தை இதனிடமிருந்து கரப்பது என முடிவு செய்து திரும்பவும் அதே கேள்வியை அமைதியாக வினவினான்.


“ஹேய் சரி உன் ஜோக்...ஹா...ஹா...ஹா...சிரிச்சுட்டேன் போருமா? இப்போ சொல்லு, என கேட்க, “எதை கொல்ல சீ...சீ...சொல்ல சொல்லறே? என புரியாத்து போல விழித்த்து குழந்தை.
“உம்ம்ம்ம்...சரி, உன்கிட்ட முன்னாடியே கேட்டேன். எப்படி நீ இந்த் வயசிலேயே பேசற, உனக்கு மட்டும் அப்படி ஒரு சக்தியா? என் குழந்தைக்கு இப்படி ஒரு சக்தியிருந்தா எனக்கு பெருமைதானே....? நீயே சொல்லு. அதனால் எல்லாத்தையும் அழகாக நீ சொல்லுவியாம் நானும் நீ பேசறதையே ஆச்சர்யமா பார்பேனாம் சரியா? எங்க சொல்லு...சொல்லு பார்க்கலாம்? என குழய,
குழந்தையிடம் ஓர் நக்கலான சிரிபொன்று உதிர்ந்த்து. தொடந்து, “சரி நீ இவ்வளவு ஆசபடுற, நான் சொல்லறேன். எனக்கு இன்னும் பழய் ஜென்மத்து ஞாபகம் போகல, எல்லா குழந்தைக்கும் இருக்கும் ஆனால் நான் ஒரு மாந்திரிகன். அதனால என்னால நினைக்க மட்டும் இல்ல பேசவும் முடியுது.
நான் இந்த உடல்ல பிறந்தேனோழிய எனக்கு பழய சக்தி இன்னும் இருக்கறத நான் இழக்க விரும்பல.

தன்னையும் மறந்து குழந்தை சொல்வதை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் கண் இமைக்க மறந்தவனாய் அந்த மாந்திரிக குழந்தையையே பார்த்துக்கொண்டிருந்தான்.