Thursday, March 20, 2014

விடுதலை



                எனக்கென்ற வாசலை இன்னும் திறக்கவில்லை நான்
            இந்த இருட்டில் எந்த வாசலை நோக்கி அடியெடுத்துவைப்பது?
                          புரியாத தவிப்பில் மூச்சு முட்டி
                        இறக்க நேரிட்டாலும் பரவாயில்லை
                        ஆனால் கண் இருந்தும் குருடனாய்
                திசை தெரியாமல் சுற்றி வருகிறேன் முடிவில்லாமல்.
                        திறந்த ஜென்னலையும் மூடிவிட்டு.


Wednesday, March 19, 2014

பெண் எனும் புத்தகம்:













திறந்த புத்தகமாய் இருக்க சுவாரஸ்யமற்றாவள்
அதனாலேயே மூடிய புத்தகமாய் இருந்தேன்
யாரும் படிக்காத புதிய புத்தகமாய் கிடந்தேன்.
யாரோ என்னை தூசிதட்டிவிட்டது போல் உணர்ந்தேன்
என் மன இலைகளில் மழை துளிகளால் கழுவப்பட்டேன்.
இளம் வெய்யிலின் சூட்டில் துளிர் விடுவது போல்
உன் அன்பில் குளிர் காய்கிறேன்.
நீல வானில் பறக்கும் பறவைக் கூட்டத்தில்
உன் எழுத்துக்களை படிக்கிறேன்.
படித்து முடித்தும் முடியாமல்
தொடர்கிறது எழுத்துக்கள்
கடைசி நிமிட பயணம் போல
ஆர்பரிக்கிறது மனம்
நிறைந்த பெளர்ணமியில்
அலைகளின் கால் பதித்த ஞாபகம்
உன் நினைவுப் பக்கங்கள் பறந்தோடி,
கலைந்து கிடக்கிறேன் நீ சேர்ப்பாய் என.

Saturday, March 15, 2014

மழைதுளியாய் நான்













கண்ணாடி திரையில் மழை துளியாய் விழுந்தேன்.
காற்று என்னும் விதி வழியே ஊந்துதலால் நழுவ
என் வழியில் சில துளிகளின் சந்திப்பு
பெருக்கெடுத்தது என் துளி நீர் உதவிய துளிகளின் வாயிலாக
அவர்களால் நான் பெருக பெருக பயணமானேன்
என் இலக்கு நோக்கி.
நன்றி உரைக்க திரும்பிப் பார்க்கையில்
எதோ ஒரு புதிய பனிதுளிக்கு வழியாகி கொண்டிருந்தது 
என் வழித்தடம்.