வெளியேற்ற நினைக்கும்
எச்சிலை விழுங்குவது போல்
மன்னிக்கிறேன்
உன் தவறுகளை.
அமிலமாக என்னை
கரைக்கிறது
நான் உள்ளுக்குள்
உருகினாலும்
இதயம் மட்டும்
ஏனோ உனக்காக
துடிக்க எஞ்சிக்கிடக்கிறது
தவறுகளின் மூலம்
நீ
தண்டனை மட்டும்
ஏனோ
எனக்கே அளிக்கப்படுகிறது
எப்போதும்
கட உள் என மனதை
கட்டுப்படுத்தினாலும்
கடவுளுக்கும்
கலங்கா உன் துரோகங்களை
கடந்து செல்ல
முடியவில்லை
பிரிய துடிக்கும்
சிறகுகளின் அடக்கப்பட்ட வலி
துரோக வலியைவிட
குறைவுதான் என
நீண்டு கிடக்கிறது
மரண வலிகள் மனமேங்கும்.
கடைந்தேடுக்கும்
துயரங்களின் மிச்சத்திலிருந்து
வலிகள் விடுபட
வெளியேறுமோ என வாழ்க்கை.