Friday, September 30, 2016

முடியும் நிமிடங்கள்














முடிந்துவிட போகிறது
உனக்கும் எனக்குமான நிமிடங்கள்
தக்கவைத்துக்கொள்ள முயலவில்லை
கலையட்டும்.

இனி எல்லாம் நான் நானாக
நான் மட்டுமே உள்ள நினைவுகளை 
சுமக்க நினைக்கிறேன்.

உன்னை போல் சேர்ந்த வெற்றுச்சுமைகளை
அந்த சிவப்புக் கட்டிடதிற்குள் 
புதைக்க விழைகிறேன்.  

கிழிந்த உன் முகத்திரையில்
ஒளிர்ந்தது என் உள்முகம்
உணர்ந்த ஒர் நிமிடம் புரிந்தது
இனி என் இடம் இதுவல்லவென... 

நிலம் பார்த்து கரம் பிடித்தவள்          
இன்று நானிலம் பார்க்க வெளிச்செல்கிறேன்..!