Sunday, April 15, 2018

நட்பென்னும் வான் மழை

என் நாட்கள், என் நிமிடங்கள், என் நோடிகள் அனைத்தையும் உனதாக்கிக் கொண்டாய்.

உரைநடையாய் கழிந்த வாழ்க்கையை கவிதையால் நிரப்பினாய்.

தண்டவாளம் போல் செல்ல மட்டுமே ஆசை
சேர்ந்தும் சேராமலும்.

நட்பேனும் பாதையில்
நடைபயணம் ஆரம்பம்
நம் கடைசி பயணம் வரையில்

நமது தேளிந்த நீரோடையில்
நம்மை கடந்து செல்வோர்
குளிர் நிலவையும் காணலாம்
சுட்டெரிக்கம் சூரியனையும் காணலாம்
பார்வை பழுதில்லாமல் இருந்தால்

விண்மீன்கள் கரையும் மட்டும் நம் நட்பென்னும் ஒளி வீசும்

விழி மூடி உன்னுடன் நடப்பேன்
இருள் சூழ்ந்த மழைக் காட்டிலும்
வான் மழையாய் நீ்
கை கோர்ப்பதென்றால்