Thursday, May 31, 2018

விடிவெள்ளி நீ













விரிந்து கிடக்கும் விண்மீன்களை பந்தென சுருட்டி
உள்ளங்கையில் ஒளித்து
நிறம் மாறும் முன்
நித்திரைக்கு துணையாய் தந்துவிட்டு
கணவுகளில் மட்டும்
வானவில்லின் வர்ணங்களை சிதரவிட்டாய்

வெறிச்சோடிப் போன என் தெருக்களில் மாவிலை தோரணங்களை
வாசனை பூக்களோடு பேசவிட்டாய்
திருவிழா பூண்டது என் மனகிராமம்

நீரில் மிதக்கும் தாமரை இலையாய்
ஒட்டியும் ஒட்டாமலும்
கழிந்த நேசங்களை ஒன்றினைத்து
தாமரை பூக்களாய் மலரவிட்டாய்
உன் சூரியக் கிரணங்களால்

நீண்ட நெடுந்தூரம் ஆகிப்போன
என் பிரியங்களை
மீட்டெடுத்து உன்னில் முடியவைத்தாய்

தேடி தொலைத்த மொழியாக
என்னை விட்டு சென்ற
நிழலாக
தனித்திருந்த என் தனிமைக்கு
தொலைதூரத்து விடிவெள்ளி நீ

வானவில்


நீ பிறந்தாய் வானவில்லாய்
அங்கு ஏழு வண்ணங்கள் மாட்டும் இல்லை
என் வாழ்வின் அனைத்து வண்ணங்களும்
அப்போதே சேர்ந்து பிறந்துவிட்டன…
சில நிமிடங்கள் வர்ணஜாலம் காட்டி
மறைந்து, நிறமிழந்து போகும்
வானவில் அல்ல நீ
பலரின் உயிரில் வண்ணமேற்றும் தூரிகை நீ
எட்டா கணியாய் மேகத்தினுள்ளே ஓடும்
வானவில் அல்ல நீ
யாவருக்கும் வளைந்து கொடுக்கும்  
பக்குவம் பெற்றவன் நீ
மலர்ந்து விரிந்து கண்களில் குளிர்ந்து
மனதில் நிறைந்து நிற்கிறாய் என்றும்
உன் உயரிய பண்பால்
உன் நட்பெனும் மழை நீரீன் கம்பிகளை
பிடித்துக் கொண்டு சூரியனுக்கு
நிகராய் மின்னும் உன் வானவில் வாழ்க்கையில்
ஒர் நிறமாய் மாற ஆசைப்படுகிறேன்,
சாயம் போகா நம் நட்பின் மீதுள்ள நம்பிக்கையால்

Friday, May 4, 2018

உனக்கானவை

உனக்கானவை எல்லாம்
என் இருதய இருப்பிடம்
என் இரவின் மெளனம்
என் சல்லரை சேமிப்பு
என் சிந்திய கண்ணீர் துளி
என் மூச்சின் வெப்ப பயணம்
என் இரவு நிலவின் நெருக்கம்
என் காதலின் வாசற்படி
என் இறைவனின் சந்நிதானம்
என் கற்பின் கருவரை
என் தோல்வில் முயற்சி
என் மெல்லிய கணவின் தொடற்சி
எனக்காக நான் சேமித்த தனிமையும்
சேர்த்து கொண்டு
இப்பொழுது
 உனக்கானவையாக மாறியது