Sunday, September 7, 2025

அன்பு

 டேய் கிளம்புடா, டைம் ஆச்சுல்ல...இன்னும் வேணு,குமார்,சாதிஷ்,தினேஷ் எல்லோர் வீட்டுக்கும் வேற போகனும்...நீயே இப்படி தூங்கிகிட்டு இருந்தா எப்படிடா அன்பு...என கதிர் கத்திக்கொண்டே வந்து அன்புவை எழுப்பினான். இவனும் சோம்பல் முறித்துக்கொண்டே “ஹும் உன் முகத்தில் விழிச்சுட்டேனா, போச்சுடா இன்னைக்கு என்ன ஆகப் போகுதோ.. என கிண்டலடிக்க, அன்புவின் அன்பான அம்மா அங்கு வந்து சேர்ந்தாள். சரி சரி, கிளம்பு, கூப்பிடறான்ல போய் சீக்கிரமா குளிச்சு கிளம்பரவழிய பாருடாஎன கூறவும் சிரித்துக் கொண்டே நண்பனை ஒரு இடி இடித்து குளிக்கச் சென்றான். “என்னைக்குமே உனக்கு விளையாட்டுத்தான் டா...என கதிர் சிரிக்க ஒருவழியாக அன்புவும் கதிரும் மற்ற நண்பர்களை அழைக்கச் சென்றனர்.

ஒவ்வொருவராய் கிளப்பிக் கொண்டு செல்வதற்குள் உச்சி போழுதாகிவிட்டது. ஆனாலும் கொஞ்சமும் வெய்யிலுக்கு நாங்களும் சளைத்தவர்களில்லை என்பது போல அவர்களது குறிக்கோளான கபடி ஆட்டத்தை ஆடதுவங்கினர். ஆடி முடித்து சிறிது சிரிப்பும் கும்மாளுமுமாக ஓய்வெடுக்கு போழுது, அந்த அணியின் தலைவனான அன்பு எல்லோரையும் பார்த்து, “வருகிற ஞாயிறு அன்று நடக்கயிருக்கிற போட்டில நாம ஜெயிச்ச கிடைக்கற பரிசு தொகைகாக மட்டும் ஆடாம், நம்ம ஊருக்கும் நமது டீமிர்க்கும் பெருமை சேர்க்க ஆடனும் சரியா...என கேப்டனுக்கேயுரிய கம்பீரத்துடன் கூற, குழுவினர் அனைவரும் உற்சாக்த்துடன் கைதட்டி ஆமோதித்தனர்.

அந்த இனிய நாளும் வந்தது, மிகக் கடுமையாக போறாடி வெற்றி கண்டனர் அன்பு குழுவினர். ரூபாய் 1 லட்சம் அணியின் தலைவனான அன்புவிற்கு அணியின் சார்பில் பரிசாக அளிக்கப்பட்டது. வந்திருந்த விருந்தினர் அரசியல் பிரமூகர்கள் ஊர் பெரியவர்கள் என அனைவரும் பாராட்டு மழை பொழிந்தனர். அடை மழைவிட்டது போல் அத்த்னை சலசலப்பிற்கு பிறகு அன்புவின் டீம் அவர்களது சொந்த ஊருக்கு திரும்பிற்று. வழியில் எல்லோரும் ஒரே சந்தோஷத்தில் திக்குமுக்காடி போயிருந்தனர் எனபதும் அந்த வெற்றியின் களிப்பு மீதமிஞ்சியே காணப்பட்டது என்பதும் அவர்களது பேச்சிலும் நடவடிக்கைகளிலுமே நன்றாக தெரிந்தது. இந்த ஒரு லட்சத்தை என்னவெல்லாம் செய்யலாம் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி ஐடியா கொடுத்துக்கொண்டே ஊர் வந்தைந்தனர்.

பிறகுதான் கவணித்தனர் அன்புவை மட்டும் காண முடியவில்லை. எல்லோருக்கும் ஒரே குழப்பமாகவும் பயமாகவும் உணர்ந்தனர். ஒவ்வொருவரும் தனித்தனியே அன்புவைப் பற்றி எண்ணமிட்டனர். ‘ஒரு வேளை பணத்துடன் வந்த அன்பு அப்படியே கம்பி நீட்டிவிட்டானா...?  என நினைத்த போழுதும் வெளியே காட்டிக்கொள்ளாமல் “பெரிய தொகையுடன் வந்த்தால் அவனை யாராவது ஏதாவது செய்திருப்பாங்களோஎன பொத்தம்பொதுவாக கூறிக் கொண்டார்னரே தவிர, ஒருவருக்கும் தான் மனதில் என்ன உண்மையாக நினைத்தோம் என வெளியே சொல்லிக்கொள்ள துணிவு வரவில்லை.

இரவு ஆனதால் வேறுவழியின்றி அவரவர் வீட்டிற்கு செல்ல வேண்டியதாயிற்று. விடிந்ததும் ஒவ்வொருவரும் ஒரு புது பொருளுடன் அவரது குடும்பத்தாருடன் அன்புவின் வீட்டின் முன் நின்றிருந்தனர். அன்புவின் அம்மாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. அன்புவை எழுப்பி வெளியே வந்து பார்க்கச் செய்தார். அன்புவை பார்த்தும் எல்லா நண்பர்களும் சேர்ந்து நன்றி கூற...கதிர் முன்னால் வந்து நின்று “ஏன் இப்படி செஞ்சே..? எங்க கிட்டயும் சொல்லியிருந்தா நாங்களும் சேர்ந்து வந்து வாங்கியிருப்போம்லஎன்றான். அதற்கு அன்பு,இல்லடா அன்னைக்கு ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் கூப்பிட போகும் போதுதான் தெரிஞ்சது யார் யாருக்கு அவங்க வீட்ல என்னென்ன தேவைனு, நாமபாட்டுக்கு வெற்றி களிப்பில அதை ஊதாரித்தனமா செலவு செய்ய நினைச்சோம். எனக்கு அது சரினு தோனலை. உங்க சந்தோஷ்த்தைவிட நம்மள பெத்தவங்க, கூடபிறந்தவங்க சந்தோஷம் முக்கியம்னுபட்ட்து அதான் தனியா போயே வாங்கி வந்துட்டேன். உங்கள கூட்டிகிட்டு போயிருந்தா அளவிற்கு மீறியோ குறைச்சோ இல்ல கூச்சபட்டுகிட்டு வாங்காமகூட இருந்திருவீங்கனு தான்.... என தயங்க, நண்பர்கள் அனைவரும் அன்புவை அன்புடன் அணைத்துக் கொண்டனர். நேற்று தப்பாக நினைத்த்தற்கு குற்ற உணர்வினால் மானசீகமாய் மன்னிப்பு கேட்டுக்கொண்டே....!

 

Wednesday, October 25, 2023

நட்சத்திர புள்ளி




நட்சத்திரங்கள் யாருடைய 
ஆசைகளின் முற்றுப் புள்ளிகள்...?
புள்ளிகளின் வழியே
கோலமென வளைகிறது 
வாழ்க்கை...! 

Saturday, September 30, 2023

தூரிகா


 

துயில்


தொலைத்துவிட்ட என் தூக்கத்தை உன் கண்களில் தேடுகிறேன் 

துயில்கொள்ளும் நேரம் எல்லாம் தொலைதூரம் போயிற்று

என் வானம் இன்னும் சில இருட்டுகளை கொண்டிருந்தாலும் விடியலுக்கான ஒளி சிதறல்களை உன் விழி மூலம் காண்கிறேன். 

என்னை மீட்டு எடுக்கும் உன் நினைவுகளுக்கு முடிவில்லா முள்வேலி போடுகிறது மனது. 

வாழ்ந்து விடு



நீல கடலும் தொடுவானமும் 
இழையும் புள்ளியாய் 
உன்னுடன் பயணிக்கும் நாட்கள் 
நீண்டு கொண்டே இருக்க வேண்டும் என்னாளும். 
கலையாத கனவாக
நிஜத்தின் நிழலாக
தொலையாத வரமாக
தொடர்ந்து வரும் பெரும் துணையாக 
அம்மா என்ற ஒற்றை சொல்லின் அடையாளமாக என் அடைக்கலமாக 
வாழ்ந்து விடு என்னருகே முடிவற்ற செவ்வானமாக என்னாளும். 

வன வாசம்


பதினான்கு வருட வனவாசம் முடிந்தாயிற்று 

ஆனாலும் இன்னும் வனம் தான் எனை விடவில்லை 

வனம் விட்டு வரா வனவாச வாழ்க்கையில் 

சிறு பூக்கள் எனை சிறைப்படுத்துவதேன்... 

நொருங்கி விட்ட காய்ந்த இலையாய் 

சிறகிழந்த சருகாய்  மனம் வனம் சுற்றி வரும் என்னாளும்.

நூல் சிக்கல்கள்


 

Tuesday, August 30, 2022

தொடரும் செல்லங்கள்





நான் எங்கு சென்றாலும் என் முன்னே 
பின்னே தொடரும் நாய் குட்டியாய்
என் மீது படரும் முல்லை கொடியாய்
உன் ரீங்காரத்தில் என் தூக்கம் கலைத்தாய்
உன் நண்பர்களிடமும் என்னைப் பற்றி உரைத்தாய் 
என் மீது மோதி மெத்தேன்ற 
என் செல்ல அடியில் 
பொத்தென்று நீ விழ 
கைதட்டிய பாராட்டாய் எண்ணி 
உன் இனம் எனை நோக்கி ஆவலாய் படர... உன்னை தொடரவே அனுப்பி வைத்தேன். 
உன் இறப்புக்கு என் ஆழ்ந்த இரங்கல் 
ஓ... எனதருமை கொசுவே...!
 

Friday, November 19, 2021

அம்மா


 என் திசையாவும் உன்னில் முடியும்

என் விழியோர பார்வை கூட உன்னை தேடும்

என் வழியாவும் உன்னை வந்து சேரும்

என் வருங்காலம் உன்னில் துவங்கும்

மனம் ஏங்கும் முப்பொழுதும் 

இமைக்கும் நொடி கூட பிரியா வரம் வேண்டும்! 

என் பிறப்பினூடே உன் மறுபிறப்பு பெற்றவள். உன் உடல் ஒட்டி வளர்ந்தேன். உன் உயிர் பற்றி கிடந்தேன். விதி பற்றி செல்லும் வாழ்க்கையில் உன் ஓர் விரல் பற்றி சொல்லும் வழி வேண்டும் அவ்வளவே! 

இன்று அன்னையானவள் சேயானாள். பற்கள் அற்ற வார்த்தைகளில் மழலை மொழி கற்றேன். 

உன் சேயாய் துவங்கிய என் வாழ்வில் ஓர் அழகிய பிறழ்வு... 

நான் இன்று தாயானேன் உனை சீராட்டி தாங்கும் தருணத்திற்காகவே...! 




Monday, May 20, 2019

வெப்பம்




வெட்டப்பட்ட மரங்களின்
பெருமூச்சுதான் அனல் காற்றாய்
நமை எரிப்பது

காய்ந்த குளங்களில் மடியில் மடிந்திருக்கும் மீனின் உடலை புழுதிக்காற்று அடக்கம் செய்தது.

கோடை காலங்கள்  நன்கொடையாகமல்
பறவைகளின் தீப்பிடித்த இறகுகளில் நாம் எரித்தெறிந்த தீக்குச்சிகளின் பங்கும் ஒட்டியுள்ளன

வீட்டிற்கொர் மரம் வளர்க்கும்
திட்டம் மறக்கப்பட்டு
வீட்டிலுள்ளோர் மரமாயினர்
தேக்கு, சந்தன, செம்மரங்களாய் சிலையாயினர்...

தட்டுகள் தங்கமாய் மின்னாவிடினும்
அதற்கான நோக்கம் அழியாமல் இருக்கட்டும்

விவசாயிகளின் கண்களில் மட்டும்
பெய்யும் மழை
இனியேனும் வானில் இருந்து
பொழியட்டும்

Tuesday, May 14, 2019




சிலந்தி:

அழகாய் நூல் சற்றுகிறாய்...
சிறு பூச்சிகளை தேடி அலையாமல்
தானாக வந்து விழ,
அலங்கார தோரணம் கட்டுகிறாய்...
விழுந்தவைகளை உடனே பருகாமல் சிலகாலம் துடிக்கவிட்டு
அடங்கும் நேரம் நிதானமாய் விழுங்குகிறாய் மொத்தமாக...
சாகப்போவது அறியாமல் சிறு உயிர்கள் ஊஞ்சலாடுகிறது உன் எச்சில் இழையில்...!

Friday, October 5, 2018

இலையுதிர் காலம்


பூக்களிடத்திலும் சொல்லவில்லை 
என் மனக்கேதங்களை.
பின் எவ்வாறு தெரிந்தன  

வண்ணங்கள் மாறாவிடினும் 
இலைகளை பிரிந்து உதிந்தன 
என் மனப்பிளவை ஒத்தவாரு...?

வாசனையற்ற பூக்களாய் தெருவோரம் உதிர்ந்து, 
வண்ணங்கள் இழக்கும் தருவாயில்.... 
எதற்கும் இருக்கட்டும் என 
எதற்கு மாலை தொடுற்கிறாய்...?

உதிர்ந்த பூக்கள் மீண்டும் மரங்களில் சேர்வதில்லை. 
இலையுதிர் காலம் வரை காத்திருக்கின்றன. 
இலைகளுக்கும் பூக்களின் வலி புரியும் வரை.

Thursday, May 31, 2018

விடிவெள்ளி நீ













விரிந்து கிடக்கும் விண்மீன்களை பந்தென சுருட்டி
உள்ளங்கையில் ஒளித்து
நிறம் மாறும் முன்
நித்திரைக்கு துணையாய் தந்துவிட்டு
கணவுகளில் மட்டும்
வானவில்லின் வர்ணங்களை சிதரவிட்டாய்

வெறிச்சோடிப் போன என் தெருக்களில் மாவிலை தோரணங்களை
வாசனை பூக்களோடு பேசவிட்டாய்
திருவிழா பூண்டது என் மனகிராமம்

நீரில் மிதக்கும் தாமரை இலையாய்
ஒட்டியும் ஒட்டாமலும்
கழிந்த நேசங்களை ஒன்றினைத்து
தாமரை பூக்களாய் மலரவிட்டாய்
உன் சூரியக் கிரணங்களால்

நீண்ட நெடுந்தூரம் ஆகிப்போன
என் பிரியங்களை
மீட்டெடுத்து உன்னில் முடியவைத்தாய்

தேடி தொலைத்த மொழியாக
என்னை விட்டு சென்ற
நிழலாக
தனித்திருந்த என் தனிமைக்கு
தொலைதூரத்து விடிவெள்ளி நீ

வானவில்


நீ பிறந்தாய் வானவில்லாய்
அங்கு ஏழு வண்ணங்கள் மாட்டும் இல்லை
என் வாழ்வின் அனைத்து வண்ணங்களும்
அப்போதே சேர்ந்து பிறந்துவிட்டன…
சில நிமிடங்கள் வர்ணஜாலம் காட்டி
மறைந்து, நிறமிழந்து போகும்
வானவில் அல்ல நீ
பலரின் உயிரில் வண்ணமேற்றும் தூரிகை நீ
எட்டா கணியாய் மேகத்தினுள்ளே ஓடும்
வானவில் அல்ல நீ
யாவருக்கும் வளைந்து கொடுக்கும்  
பக்குவம் பெற்றவன் நீ
மலர்ந்து விரிந்து கண்களில் குளிர்ந்து
மனதில் நிறைந்து நிற்கிறாய் என்றும்
உன் உயரிய பண்பால்
உன் நட்பெனும் மழை நீரீன் கம்பிகளை
பிடித்துக் கொண்டு சூரியனுக்கு
நிகராய் மின்னும் உன் வானவில் வாழ்க்கையில்
ஒர் நிறமாய் மாற ஆசைப்படுகிறேன்,
சாயம் போகா நம் நட்பின் மீதுள்ள நம்பிக்கையால்