Showing posts with label உறவுக் கவிதைகள்.... Show all posts
Showing posts with label உறவுக் கவிதைகள்.... Show all posts

Wednesday, October 19, 2011

மலட்டுத்தாயின் மகவு




சேற்றுச் செந்தாமரை நீ

இறைவனின் இரக்கம் நீ

நிலவின் நிழலாய்

கனவின் கருவாய்

என் இதய வாசலில் கால் பதித்தாய்

பாலைவனத்திலும் வானவில்லின்

எட்டாவது வர்ணமாய்

நீ தவழும் அழகைப் பார்த்திருப்பேன்

என் தலை சாயும் வரை உடன்வா...

வாழ்ந்து தான் பார்போம்.

வாழ்க்கையின் எதிரெதிர் துருவங்கள்

சேரும் போது சுபமாகட்டும் இங்கே...!

Tuesday, October 18, 2011

என் வாழ்க்கை வாக்கியங்கள்..!

அம்மா..! என் முத‌ல் வாக்கிய‌மாய் முழு வாக்கிய‌மாய்...!

உன்னால் நான் க‌ண்ட‌ இர‌ண்டாம் வாக்கிய‌மாய்

க‌ல‌ங்க‌ரை விள‌க்காய் என் வாழ்க்கைக்கு அடைக‌ல‌மாய் அப்பா..!

உற்ற‌ உற‌வாய் உண‌ர்வாய், உட‌ன்பிற‌ந்த‌வ‌ள் என்னும்

உன்னால் நான் கொண்ட‌ ம‌ற்றோரு வாக்கிய‌ம்...!

ம‌கிழ்ச்சியையும் சோக‌த்தையும் ஒன்றாய் கொட்டிக் கொண்டாட‌

ந‌ண்ப‌ர்க‌ள் என்னும் திருவாக்கிய‌ம்....!

உட‌ன்பிற‌ந்த‌வ‌ளின் இன்னோருர் உயிராய்

என்னை நோக்கி பிஞ்சு கை நீட்டும்

ஒர் இனிய‌ வாக்கிய‌ம்...!

என் ம‌ன்ற‌ம் வ‌ந்த‌ ம‌ழைக் காற்றாய்

என்னை எப்போழுதும் த‌ழுவிச் செல்லும் என்றும்இத‌மாய்

முத்த‌மிழ் ம‌ன்ற‌ம் என்னும் பெரும் வாக்கிய‌ம்...!

Saturday, September 24, 2011

உடன்பிறப்பவள்...உயிரின் மறுபிறப்பவள்....


என் உறவாய் மலர்ந்த
உடன்பிறப்பவள்
என் உயின்
மறுபிறப்பவள்....

மலரிதழில் மழைத்துளியாய்
என்னை மண்ணில்
விழாமல் காப்பவள்...

பூவாசம் முள்ளிற்கும்
ஒட்டிக்கொள்வதுண்டு
எனக்காக முள்ளாய்
சில நேரம் நீ
மாறியதுமுண்டு....

விழியோரம் வழிந்திடும்
கண்ணீரும் உன்னால்
அன்பின் மழையாய்,
மகிழ்ச்சியின் சாரலாய்
கரைந்த்துண்டு...

நீ நீர் பூத்த நெருப்பாய்
நிலைத்திருக்கிறாய்
உன் கதகதப்பில் என்றும்
நான் குளிர்காய்வதற்கு....

கைக்கெட்டிய தூரத்தில்
வானவில்
நாம் கைகோர்த்த நேரத்தில்
சிரிக்கும்....

இனியும் நினைவில் வைப்பதற்கு
நிறைய நிஜங்கள்
காத்திருக்கின்றன...
வாழ்நாள் போதாது
உன் நிழலாய் நான் தொடர்வதற்கு....

Wednesday, September 21, 2011

அம்மா...


இந்த கவிதையை எனது தாய்க்கு சமர்பிக்கிறேன். இது எனது தாய்க்கு மட்டும் அல்ல உலகிலுள்ள அனைத்துத் தாய்மார்களுக்கும் பொருந்தும். அதனால் இக்கவிதை அவர்கள் எல்லாருக்கும் எனது சிறிய காணிக்கை.

அம்மா...

ஒரு வாய் சோற்றுக்கு
ஏங்கி நின்ற காலம் இல்லை
உன் சோற்றுக் கவளங்களையும்
சேர்த்துத்தந்தாய்....

சிட்டாடை கட்ட ஆசையில்லை
பட்டுப்பூச்சியிடம் இரக்கம் காட்ட
கற்றுத்தந்தாய்....

சிறு வயதில் கால் நடை பழக்கமில்லை
குதிரை சவாரியைவிட
உன் இடுப்பு சவாரி சுகமானது....

தங்கவளையல் தரமிழந்து போனது
உன் கண்ணாடி வளையலிடம்
போட்டிப்போட்டு....

உன்னிடத்து என் அன்பை வெளியிட
இச்சொல்லே போதும்
"என் அம்மா"....

என்னுள் ஆறறிவைத்தாண்டி
ஏழாம் அறிவாய் சுழலும்
உன் பாசம்...

என் கண்ணீர் தகுதியானது
உன்னை நினைக்கும்
பொழுது மட்டுமே....

நான் பிறந்த நாளைக்
கொண்டாடுகிறேன்
நீ உயிர்தெழுந்த நாளுக்காக....

நிழலாக போகும் நிஜம் நீ.
ஆனால் முடியவில்லை...
தொடர்கிறது...
ஒவ்வொரு உயிரிடத்தும் தாயன்பு....