Showing posts with label நட்பு கவிதைகள். Show all posts
Showing posts with label நட்பு கவிதைகள். Show all posts
Monday, September 22, 2025
Thursday, May 31, 2018
வானவில்
நீ பிறந்தாய் வானவில்லாய்
அங்கு ஏழு வண்ணங்கள் மாட்டும் இல்லை
என் வாழ்வின் அனைத்து வண்ணங்களும்
அப்போதே சேர்ந்து பிறந்துவிட்டன…
சில நிமிடங்கள் வர்ணஜாலம் காட்டி
மறைந்து, நிறமிழந்து போகும்
வானவில் அல்ல நீ
பலரின் உயிரில் வண்ணமேற்றும் தூரிகை நீ
எட்டா கணியாய் மேகத்தினுள்ளே ஓடும்
வானவில் அல்ல நீ
யாவருக்கும் வளைந்து கொடுக்கும்
பக்குவம் பெற்றவன் நீ
மலர்ந்து விரிந்து கண்களில் குளிர்ந்து
மனதில் நிறைந்து நிற்கிறாய் என்றும்
உன் உயரிய பண்பால்
உன் நட்பெனும் மழை நீரீன் கம்பிகளை
பிடித்துக் கொண்டு சூரியனுக்கு
நிகராய் மின்னும் உன் வானவில் வாழ்க்கையில்
ஒர் நிறமாய் மாற ஆசைப்படுகிறேன்,
சாயம் போகா நம் நட்பின் மீதுள்ள நம்பிக்கையால்
Sunday, April 15, 2018
நட்பென்னும் வான் மழை
என் நாட்கள், என் நிமிடங்கள், என் நோடிகள் அனைத்தையும் உனதாக்கிக் கொண்டாய்.
உரைநடையாய் கழிந்த வாழ்க்கையை கவிதையால் நிரப்பினாய்.
தண்டவாளம் போல் செல்ல மட்டுமே ஆசை
சேர்ந்தும் சேராமலும்.
நட்பேனும் பாதையில்
நடைபயணம் ஆரம்பம்
நம் கடைசி பயணம் வரையில்
நமது தேளிந்த நீரோடையில்
நம்மை கடந்து செல்வோர்
குளிர் நிலவையும் காணலாம்
சுட்டெரிக்கம் சூரியனையும் காணலாம்
பார்வை பழுதில்லாமல் இருந்தால்
விண்மீன்கள் கரையும் மட்டும் நம் நட்பென்னும் ஒளி வீசும்
விழி மூடி உன்னுடன் நடப்பேன்
இருள் சூழ்ந்த மழைக் காட்டிலும்
வான் மழையாய் நீ்
கை கோர்ப்பதென்றால்
உரைநடையாய் கழிந்த வாழ்க்கையை கவிதையால் நிரப்பினாய்.
தண்டவாளம் போல் செல்ல மட்டுமே ஆசை
சேர்ந்தும் சேராமலும்.
நட்பேனும் பாதையில்
நடைபயணம் ஆரம்பம்
நம் கடைசி பயணம் வரையில்
நமது தேளிந்த நீரோடையில்
நம்மை கடந்து செல்வோர்
குளிர் நிலவையும் காணலாம்
சுட்டெரிக்கம் சூரியனையும் காணலாம்
பார்வை பழுதில்லாமல் இருந்தால்
விண்மீன்கள் கரையும் மட்டும் நம் நட்பென்னும் ஒளி வீசும்
விழி மூடி உன்னுடன் நடப்பேன்
இருள் சூழ்ந்த மழைக் காட்டிலும்
வான் மழையாய் நீ்
கை கோர்ப்பதென்றால்
Friday, March 9, 2018
நட்பெனும் சுவாசம்
மறிப்பேனோ உந்தன் மடியில்
மலர்கின்றேன் உன்னுடன் சிரிக்கின்ற பொழுதில்
சில நேரம் தவித்தேன்
பல நேரம் தவழ்ந்தேன்
குழந்தையாய் உந்தன் அருகில்
நட்பென்ற நெருப்பின்பிடியில்
சுட்டாலும் வெண்சங்காய் நிறத்தில்
தேடிக்கிடைத்த நட்பென்ற புதயலுக்கு வழி நீ
விரல் கோர்த்து துணை நின்றாய்
கடைசி நிமிடமும் நீங்கா உன் நேசம் வேண்டும்
நினைவில் உன் நட்பெனும் சுவாசம் வேண்டும்
மலர்கின்றேன் உன்னுடன் சிரிக்கின்ற பொழுதில்
சில நேரம் தவித்தேன்
பல நேரம் தவழ்ந்தேன்
குழந்தையாய் உந்தன் அருகில்
நட்பென்ற நெருப்பின்பிடியில்
சுட்டாலும் வெண்சங்காய் நிறத்தில்
தேடிக்கிடைத்த நட்பென்ற புதயலுக்கு வழி நீ
விரல் கோர்த்து துணை நின்றாய்
கடைசி நிமிடமும் நீங்கா உன் நேசம் வேண்டும்
நினைவில் உன் நட்பெனும் சுவாசம் வேண்டும்
Sunday, February 11, 2018
நட்பதிகாரம்
ரெக்கை விரிக்கிறேன்
உன் நட்பேனும் வானில்
நிலவாய் ஒளிர்கிறேன்
உன் சூரிய கிரனங்களால்
வீழ போவதில்லை
நட்பெனும் சிகரம் தொட்டு.....
கீழ்நோக்கி பாயும் அறுவிபோல் மட்டுமே ஆவேன்
காதல் கேட்காமல் கவிதை கேட்டாய்
நண்பனே.....
ஆண்மகனில் ஓரே அன்னை நீ.
என்றும் இந்த நட்புக் கப்பல் அலையாடும்
கலங்கரை விளக்காய் நீ இருந்தால்.
உன் நட்பேனும் வானில்
நிலவாய் ஒளிர்கிறேன்
உன் சூரிய கிரனங்களால்
வீழ போவதில்லை
நட்பெனும் சிகரம் தொட்டு.....
கீழ்நோக்கி பாயும் அறுவிபோல் மட்டுமே ஆவேன்
காதல் கேட்காமல் கவிதை கேட்டாய்
நண்பனே.....
ஆண்மகனில் ஓரே அன்னை நீ.
என்றும் இந்த நட்புக் கப்பல் அலையாடும்
கலங்கரை விளக்காய் நீ இருந்தால்.
Wednesday, December 7, 2011
அறிமுகம்

உன் அறிமுகம் எனக்கு
தாய்மொழியாம் தமிழ்
மறைமுகமாய் வெளிப்பட்டது
என் எழுத்தின் உன் பிழைத்திருத்தங்கள்
பின்னிருந்து அக்கரை பேசியது எனக்காக.
உன் கோவ கேள்விகளில்
விடையும் ஒளிந்து சிரித்தது என்னை பார்த்து
செதுக்கிய சிற்பமாய் நானாக,
உளியின் கல்லாய் உருமாற,
என்னைவிட்டு கவலை கற்கள் அகலவைத்தாய்
தெளிந்த நீரோடையின் கூழாங்கற்களாய்
உவமேயம் அன்றி உவமானமாய்
நட்பில் தொடங்கி சகோதரத்தில் முடிந்த
உறவு பாலமாய் தொடர்ந்தாய்
காற்றாய் மாறி என் திசை காட்டினாய்
மேகத்துடன் மேகமாய் பயணித்து
மண்ணில் விழும் மழையாய் உருமாற்றினாய்
நிலவு பூசி முகம் காட்ட
சூரியனுக்கு ஒர் இரவு
என் துயர் இருளில்
நீ நிலவு கதிர்வீச்சு
உயிர்த்தோழமையே
உலகிற்கு தெரியா உண்மையிது
நீ என் அடுத்த அம்மாவென்று.
Tuesday, October 18, 2011
நட்பின் வருகை
என் வாசல் கிளிஞ்சல்களின் சத்தம்
உன் வருகையை வரவேற்று
கடனுக்குக் கூட கண்ணீர் மிச்சமின்றி போனது
உன் பூமுகத்தை பார்த்து
வசந்தகாலம் வாசல் வந்தது
புன்னகை பூத்து
என்னுள் நுழைந்துவிட்டாய் இதயம் துடிக்கும்
இனி உனக்கும் சேர்த்து
வா காலம் முழுவதும் கை கோர்ப்போம்
காலனையும் விலைக்கு கேட்போம் சேர்ந்து.
உன் வருகையை வரவேற்று
கடனுக்குக் கூட கண்ணீர் மிச்சமின்றி போனது
உன் பூமுகத்தை பார்த்து
வசந்தகாலம் வாசல் வந்தது
புன்னகை பூத்து
என்னுள் நுழைந்துவிட்டாய் இதயம் துடிக்கும்
இனி உனக்கும் சேர்த்து
வா காலம் முழுவதும் கை கோர்ப்போம்
காலனையும் விலைக்கு கேட்போம் சேர்ந்து.
Subscribe to:
Posts (Atom)
