
பிரிவு என்பது
நிலையாதிருப்பதன் மெளன மொழி.
நாம் கேட்கும் சக்தியிழந்த பின்
கிடைக்கும் பெரும் சப்தம்.
காலம் கடந்த காட்டு வழி ஞானம்.
நேசிப்பவரின் இறுதி சுவாசிப்பு.
நிலம் நீங்கி நிலத்தில் புதைத்தாலும்
உரிமை இழந்து உறவாடும் சவப்பெட்டி.
அவ்வழி சென்றோரின் வரிசையில் நாம்
தொலைந்து போனதை தேடிக்கொண்டு.
