Friday, August 31, 2012

நீல நிற நிலா

வித்தியாசமான செய்திகளை இங்கு பதிவோமே... என்னை அதிகம் கவரும் செய்திகள் விஞ்ஞான சம்மந்தமானதாக இருக்கும். அது போல் எதுவாகினும் கவர்ந்தால் இங்கு பதியவே எண்ணி இதை தொடங்கினேன்.

வாருங்கள் இன்றைக்கு என்னை கவர்ந்த செய்தியினை காண்போம்...

 




இன்று மாலை வானில் சந்திரன் நீல நிறத்துடன் தெரியும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. மிக அரிய காட்சியான இது மாலை 6.13 மணி முதல் இரவு 7.28 மணி வரை சுமார் 1 மணி நேரம் நீடிக்கும். மேலும், இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் இந்த அரிய காட்சியை காணமுடியும். முழு நிலவு நீல நிறத்தில் தெரியும் இதே போன்ற காட்சியை இனி 2015ம் ஆண்டு ஜூலை மாதம் தான் மீண்டும் காணமுடியும் என வானியல் ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=24004
நன்றி தினகரன் நாளிதழ்.

Sunday, August 19, 2012

சாகா வரம்





















நெருங்கி நின்ற வார்த்தைகள்

நம் பிரிவை ஓதுகின்றன.

நாம் ஒன்றாய் இருந்த நினைவுகள்

விசிறி மடிப்புகளாய் விரிந்து கிடக்கின்றன

சுருங்கி விரியும் தொட்டாசிணுங்கி இலையாய்

மனதில் துளிர்த்த வெட்கம்

இப்போது சுருங்கி கிடக்கிறது

துளிர்த்ததின் நடுவில் கருவேலமுள்லாய்

உன் துரோகம் பரவிக்கிடக்கிறது

வருடங்கள் கரைந்து போகின்றன

படிகளாக பதிவுகளை மட்டும்

மறக்காமல் இட்டுக்கொண்டு...

நினைவுகள் சாகா வரம் பெற்றவையாக

என் நிஜங்களை சாகடித்துக்கொண்டு.....

Monday, August 13, 2012

இறப்பு













நான் இறக்க நினைக்கிறேன்
   என் வாழ்க்கை இறந்துவிட்டதால்
மழைக் காடுகளில் சுற்றி திரிய
   மண்வாசனை நாசி நுழைய
பிறந்து கொண்டே இறக்கிறேன்.

பூவிறக்கையின் பனித்துளியாய் நழுவ
   விரிந்த பறவையின் காற்றாய் தழுவ
பிறந்து கொண்டே இறக்கிறேன்.

மலையை பிரிக்கும் புனலாய் பாய
மேக மெத்தையின் வெண்மையாய் பரவ
பிறந்து கொண்டே இறக்கிறேன்.

பாதம் நனைத்த குளிராய்
பகலில் குளிக்கும் நிலவாய்
புத்துணர்வூட்டும் கதிராய்
இயற்கையின் மடியில்
இறந்து கொண்டே பிறக்க இருக்கிறேன்....

Monday, July 2, 2012

நிசப்தத்தின் சப்தம்(அத்தியாயம் 2)


உள்ளிருந்து சிரிந்த முகமாய் சுஜாதா வெளியே வந்தாள். “என்னங்க ஏன் இவ்வளவு லேட்டா வரீங்க? சரி வந்தது வந்தீங்க ரொம்ப நேரமா இங்கயே நின்னுகிட்டு இருக்கீங்க, நீங்களும் வருவீங்க வருவீங்கனு பார்த்தா, சரியான ஆளுங்க நீங்க..... நீங்க தெரு முக்குக்கு வரும்போதே பார்த்துட்டேன். உள்ளே நீங்களே வரலைன்னதும் நானே சர்ப்ரைஸ் கொடுக்க வெளியே வந்தேன். என ஒரே மூச்சில் கூறி முடித்தபின்னும் அவள் சுஜாதா தானா என சந்தேகமும் துணைக்கு ஆள் கிடைத்ததே என்ற சந்தோஷமும் வர, அப்படியே அயாசமாக அவளை கட்டிபிடிக்க எத்தனிக்க, “ஹேய் வேண்டாம் வேண்டாம். இப்போ நான் இரண்டு ஆளாக்கும்”, என கூற இரட்டிப்பு சந்தோஷத்தில் துள்ளினான்.


சில மாதங்களுக்கு பிறகு...

“ஹும்... கொஞ்சம் குழந்தையை பார்த்துக்கொங்களேன்என்று கூறி குளிக்க சென்றாள் சுஜாதா. குழந்தை கொள்ளை அழகாக தனது பொக்கை வாயை காட்டி சிரித்தது இவனை பார்த்து. “ஹே என் அச்சு குட்டி, பட்டு குட்டி, அம்மு குட்டிஎன கொஞ்ச ஆரம்பித்தான். “ஏய், போரும் போர் அடிக்குது. ஒரே மாதிரி கொஞ்சாதேஎன்ற குரல் வந்த திசையை பார்த்து அதிர்ச்சியடைந்தான் தருண். உட்கார்ந்த வாக்கில் பூகம்பம் வந்ததாக் உணர்ந்தவன் குழந்தையின் முகத்தையே உற்று பார்த்து திருதிருவென விழித்தான். மிக கடுப்புடன் “அட, ஏன் இப்படி பார்க்கிற?! இதுவரைக்கும் குழந்தைகளை பார்த்ததே இல்லையா?என அலட்ச்சியமாக கூறியது குழந்தை. உடனே தருண் திக்கி தினறி என்ன நடக்கிறது இங்கே என குழம்பி, ‘ஏய்...நீ... நீ...பே...பேசற? எப்படி...? என்று ஒரு வழியாக முடித்தான்.

இது என்ன வம்பா போச்சு. நான் சாகர வரைக்கும் நல்லாத்தான் பேசிகிட்டு இருந்தேன். ஏன் இப்ப என்னல பேச முடியாதா? என கேட்டது தான் தாமதம் உடனே அலறி அடித்துக்கொண்டு குழந்தையை படுக்கையிலேயே தொப்பென்று போட்டுவிட்டு குளியலறை பக்கம் ஓடினான்.” “ஹே...சுஜா...சுஜா... கதவை திறடி, கதவை திற... என உளரலாக கத்த, “ஏங்க, இப்படி கத்தறீங்க, போங்க போய் வேலைய பாருங்க, என்னமோ இப்பத்தான் புதுசா கல்யாணம் ஆனமாதிரி நடந்துக்கறீங்க. போய் குழந்தையை கவனிச்சுக்கோங்க முதல்ல” என திட்டி தீர்த்தாள்.
‘ஏய் இல்லமா... நம்ம குழந்தை பேசுது எனவும். ஹும்ம்... விளையாடாதீங்க நீங்க என்ன சொன்னாலும் நான் கதவை திறக்கமாட்டேன். நிம்மதியா குளிக்க கூட விட மாட்டீங்களா? குழந்தையை இரண்டு நிமிஷம் தான் பார்த்துக்க சொன்னேன். அதுகூட முடியலையா? என பேசிக் கொண்டே போக, “ஏய் அது பேசுதுடி பேசுது புரியுதா? நான் ஒன்னும் விளையாடல. பயந்து போய் உன்கிட்ட வந்து சொன்னா. நீ வேற.... வெளில வா சீக்கிரம். நான் உண்மை என்னன்னு காட்டறேன் என்றான்.

“ சரி...சரி... இருங்க வரேன். நம்ம குழந்தை பேசுறதை நானும் கொஞ்சம் கேட்டு சந்தோஷபடறேன்.என கிண்டலடித்துக் கொண்டே வந்து குழந்தையை தூக்கி கொஞ்சினாள். அது சமத்தாக தூங்கிக் கொண்டிருந்ததால் சின்ன செல்ல சினுங்கல் ஒன்றை உதிர்க்க. “ஆஹா...ஆஹா... நம்ம குழந்தை சூப்பரா பாட்டு பாடுதுல.. என மேலும் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிவிட்டு சமயலுக்கு தாளிக்க எண்ணெய் எடுக்க சென்றாள் நமுட்டு சிரிப்புடன். ரொம்ப சந்தோஷம்டி, ரொம்ப சந்தோஷம். என வெறுப்புடன் குழந்தையை திரும்பி பார்க்க அது இவனை பார்த்து கண் அடித்து சிரித்தது. 

Sunday, June 24, 2012

நிசப்தத்தின் சப்தம்


தருண் அந்த அமானுஷ்ய புத்தகத்தில் முழ்கிய அந்த நள்ளிரவு நேரம் அவனுக்குள் திகில் பரவத் தொடங்கியது. எந்த ஆன்மாவும் உயிர் பிரிந்தபின் அழிவதில்லை. அதனதன் பாவ புண்யத்திற்கேற்ப அடுத்த பிறவிக்காக தயாரகுகிறது. அதன் மறுபிறப்பிலும் சில மாதங்களுக்கு அதன் பழைய நியாபகங்களும், நினைவுகளும் தொடர்கின்றன....இவ்வாறு புத்தகம் முழுவதும் ஆவிகள் பற்றிய தகவல்கள் அடங்கியிருந்தன.

தருண் இதையெல்லாம் ஏன் படித்தோம், அதுவும் இந்த நள்ளிரவில் மனைவி சுஜாதா இல்லாத நேரத்தில் என மிக பயந்து போயிருந்தான். மனைவி இரண்டு நாட்களுக்கு தனது பாட்டியின் உடல் நலன் குன்றிய காரணத்திற்காக செல்ல, ட்ரைனில் ஏற்றிவிடச் சென்றவன் சில புத்தகங்களை வாங்கச் சென்று இந்த ஆவிகளை பற்றிய புத்தகம் கண்ணில் படவே ஆர்வ மிகுதியால் வாங்கி வலிய கிலியை பற்றினான்.

எவ்வளவு தான் புரண்டுபடுத்தும் தூக்கம் வர மறுத்தது. எவ்வாறு பின் தூங்கி போனான் என அறியும் முன்னே காலையும் வந்துவிட சுறுசுறுப்பாக பழைய இரவின் தாக்கம் வராமல் பார்த்து கொண்டு இயல்பாக அலுவலகத்திற்கு கிளம்பினான். இருப்பினும் மனதின் ஓரத்தில் இன்று இரவை கழிப்பதைப் பற்றி பயம் பரவிக்கொண்டுதான் இருந்தது. வீட்டிற்கு யாரையேனும் நண்பர்களை அழைத்து செல்வோமா என எண்ணினான். ஆனாலும் விதி விளையாட அவனுடன் ஒருவரும் வர இயலாமல் போய், பேய் பயம் தலைக்கேறியது, சரி சினிமாவிற்கு சென்று பொழுதை கழித்து பின் வீட்டிற்குச் செல்ல முடிவெடுத்தான்.

பின் வீட்டிற்கு செல்கையில் பின்னிரவாகிவிட்டது. பயத்துடனேயே கதவில் கை வைத்தவனுக்கு வீட்டில் யாரோ இருப்பது போல் தோன்ற சாவியில்லாமலேயே கதவும் திறந்து கொள்ள பயத்தின் உச்சம் அதிகரிக்க இதயத்தின் சப்தமே முரசொலி போல அதிர்ந்து கேட்டு அவனை மேலும் பயமுறுத்தியது. ஹாலை கடக்கையில் நிச்சயமாகிவிட்டது, படுக்கை அறையில் யாரோ இருக்கிறார்கள் என அருகில் செல்லச் செல்ல மல்லிகை மணமும் அதிகரிக்க,உள் இருந்து வரும் மின் விசிறியின் சப்தமும், ஹாலில் மயான அமைதியின் ஊடே எழுந்த சுவர் கடிகாரத்தின் சப்தமும் சத்தியம் செய்தது இது பேயின் நடமாட்டமென. இவையனைத்தும் சேர்ந்து அவனை விரைவில் செயல்படவிடாமல் பயத்தின் உச்சத்துக்கே கொண்டு செல்ல, தடாலடியாக் கதவு தானாக திறந்து கொண்டது அவனை அதிர்ச்சியின் விளிம்பிற்கு செல்லவைத்து ஒர் அடி பின்னால் நகர்ந்தான்.

Sunday, April 22, 2012

தோழி

அப்போதுதான் எனக்கு ஆத்திரம் தாங்காமல் யாருடி அவ்ளோ பெரிய ஆளு? நான் பேசறேன். ஒத்துக்கொண்டால் சரி இல்லை என்றால் அப்பாவின் மானத்தை காப்பாத்த மண்டபத்திற்கு போ என சொன்னதும் அவள் என்னடி இப்படி கேட்கற உனக்கு தெரியாதா நான் பி.டியை விரும்புவது என்றாள்.

எனக்கு தரை நழுவியது. பூகம்பம் வந்தது போலவே தோன்றியது. என்னால் நம்ப முடியவில்லை என் தோழி இவள் நான் விரும்புபவனையா காதலிக்கிறாள் அவனுக்காகவா இவ்வளவு பாடுபடுகிறாள் என்றதும் மனதில் இருந்த ஏதோ ஒன்று கழன்று விழ உணர்ந்தேன்.

 இப்பவும் ஒர் வாய்ப்பு இவள் அப்பாவுடன் சமாதானம் செய்து மண்டபத்திற்கு செல்ல சொன்னால் இவளால் ஒன்றும் செய்ய இயலாது அடுத்து அவள் அப்பாவின் பிடிவாதத்தால் திருமணம் நடந்துவிடும். பின் நமக்கான பாதை வெளிச்சத்துடன் காணப்படும் என்று எண்ணத்திற்கூடே மனசாட்சி மனதிலிருந்து எட்டிபார்க்க, நானே பி.டிக்கு ஃபோன் செய்தேன். இவளுக்காக வார்த்தை வராமல் பேசினேன். பேச பேச என்னையறியாமல் என் தோழிக்காக பரிந்து பேச ஆரம்பித்தேன். கடைசியில் நேரில் சென்று பேச அவர் சம்மதித்தார். அதே திருமண்டபத்தில் அவள் கழுத்தில் இவர் கட்டிய தாலியுடன் சிரித்த முகத்துடன் என்னை பார்த்தாள்.

 மண்டபத்திலிருந்து விடைபெற்று பழய நினைவுகளிலிருந்து விடுதலை பெற்று மன நிறைவுடன், தெளிந்த வானத்தை பார்த்தேன். மனதின் பிரதி பிம்பமாய் தோன்றியது. இவள் என்றும் என் தோழி. மாற்றமில்லாமல் என்றும் தோழமையுடன் நானும்.