Saturday, September 30, 2023

துயில்


தொலைத்துவிட்ட என் தூக்கத்தை உன் கண்களில் தேடுகிறேன் 

துயில்கொள்ளும் நேரம் எல்லாம் தொலைதூரம் போயிற்று

என் வானம் இன்னும் சில இருட்டுகளை கொண்டிருந்தாலும் விடியலுக்கான ஒளி சிதறல்களை உன் விழி மூலம் காண்கிறேன். 

என்னை மீட்டு எடுக்கும் உன் நினைவுகளுக்கு முடிவில்லா முள்வேலி போடுகிறது மனது. 

வாழ்ந்து விடு



நீல கடலும் தொடுவானமும் 
இழையும் புள்ளியாய் 
உன்னுடன் பயணிக்கும் நாட்கள் 
நீண்டு கொண்டே இருக்க வேண்டும் என்னாளும். 
கலையாத கனவாக
நிஜத்தின் நிழலாக
தொலையாத வரமாக
தொடர்ந்து வரும் பெரும் துணையாக 
அம்மா என்ற ஒற்றை சொல்லின் அடையாளமாக என் அடைக்கலமாக 
வாழ்ந்து விடு என்னருகே முடிவற்ற செவ்வானமாக என்னாளும். 

வன வாசம்


பதினான்கு வருட வனவாசம் முடிந்தாயிற்று 

ஆனாலும் இன்னும் வனம் தான் எனை விடவில்லை 

வனம் விட்டு வரா வனவாச வாழ்க்கையில் 

சிறு பூக்கள் எனை சிறைப்படுத்துவதேன்... 

நொருங்கி விட்ட காய்ந்த இலையாய் 

சிறகிழந்த சருகாய்  மனம் வனம் சுற்றி வரும் என்னாளும்.

நூல் சிக்கல்கள்


 

Tuesday, August 30, 2022

தொடரும் செல்லங்கள்





நான் எங்கு சென்றாலும் என் முன்னே 
பின்னே தொடரும் நாய் குட்டியாய்
என் மீது படரும் முல்லை கொடியாய்
உன் ரீங்காரத்தில் என் தூக்கம் கலைத்தாய்
உன் நண்பர்களிடமும் என்னைப் பற்றி உரைத்தாய் 
என் மீது மோதி மெத்தேன்ற 
என் செல்ல அடியில் 
பொத்தென்று நீ விழ 
கைதட்டிய பாராட்டாய் எண்ணி 
உன் இனம் எனை நோக்கி ஆவலாய் படர... உன்னை தொடரவே அனுப்பி வைத்தேன். 
உன் இறப்புக்கு என் ஆழ்ந்த இரங்கல் 
ஓ... எனதருமை கொசுவே...!
 

Friday, November 19, 2021

அம்மா


 என் திசையாவும் உன்னில் முடியும்

என் விழியோர பார்வை கூட உன்னை தேடும்

என் வழியாவும் உன்னை வந்து சேரும்

என் வருங்காலம் உன்னில் துவங்கும்

மனம் ஏங்கும் முப்பொழுதும் 

இமைக்கும் நொடி கூட பிரியா வரம் வேண்டும்! 

என் பிறப்பினூடே உன் மறுபிறப்பு பெற்றவள். உன் உடல் ஒட்டி வளர்ந்தேன். உன் உயிர் பற்றி கிடந்தேன். விதி பற்றி செல்லும் வாழ்க்கையில் உன் ஓர் விரல் பற்றி சொல்லும் வழி வேண்டும் அவ்வளவே! 

இன்று அன்னையானவள் சேயானாள். பற்கள் அற்ற வார்த்தைகளில் மழலை மொழி கற்றேன். 

உன் சேயாய் துவங்கிய என் வாழ்வில் ஓர் அழகிய பிறழ்வு... 

நான் இன்று தாயானேன் உனை சீராட்டி தாங்கும் தருணத்திற்காகவே...!