Friday, August 31, 2012

நீல நிற நிலா

வித்தியாசமான செய்திகளை இங்கு பதிவோமே... என்னை அதிகம் கவரும் செய்திகள் விஞ்ஞான சம்மந்தமானதாக இருக்கும். அது போல் எதுவாகினும் கவர்ந்தால் இங்கு பதியவே எண்ணி இதை தொடங்கினேன்.

வாருங்கள் இன்றைக்கு என்னை கவர்ந்த செய்தியினை காண்போம்...

 




இன்று மாலை வானில் சந்திரன் நீல நிறத்துடன் தெரியும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. மிக அரிய காட்சியான இது மாலை 6.13 மணி முதல் இரவு 7.28 மணி வரை சுமார் 1 மணி நேரம் நீடிக்கும். மேலும், இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் இந்த அரிய காட்சியை காணமுடியும். முழு நிலவு நீல நிறத்தில் தெரியும் இதே போன்ற காட்சியை இனி 2015ம் ஆண்டு ஜூலை மாதம் தான் மீண்டும் காணமுடியும் என வானியல் ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=24004
நன்றி தினகரன் நாளிதழ்.

Sunday, August 19, 2012

சாகா வரம்





















நெருங்கி நின்ற வார்த்தைகள்

நம் பிரிவை ஓதுகின்றன.

நாம் ஒன்றாய் இருந்த நினைவுகள்

விசிறி மடிப்புகளாய் விரிந்து கிடக்கின்றன

சுருங்கி விரியும் தொட்டாசிணுங்கி இலையாய்

மனதில் துளிர்த்த வெட்கம்

இப்போது சுருங்கி கிடக்கிறது

துளிர்த்ததின் நடுவில் கருவேலமுள்லாய்

உன் துரோகம் பரவிக்கிடக்கிறது

வருடங்கள் கரைந்து போகின்றன

படிகளாக பதிவுகளை மட்டும்

மறக்காமல் இட்டுக்கொண்டு...

நினைவுகள் சாகா வரம் பெற்றவையாக

என் நிஜங்களை சாகடித்துக்கொண்டு.....

Monday, August 13, 2012

இறப்பு













நான் இறக்க நினைக்கிறேன்
   என் வாழ்க்கை இறந்துவிட்டதால்
மழைக் காடுகளில் சுற்றி திரிய
   மண்வாசனை நாசி நுழைய
பிறந்து கொண்டே இறக்கிறேன்.

பூவிறக்கையின் பனித்துளியாய் நழுவ
   விரிந்த பறவையின் காற்றாய் தழுவ
பிறந்து கொண்டே இறக்கிறேன்.

மலையை பிரிக்கும் புனலாய் பாய
மேக மெத்தையின் வெண்மையாய் பரவ
பிறந்து கொண்டே இறக்கிறேன்.

பாதம் நனைத்த குளிராய்
பகலில் குளிக்கும் நிலவாய்
புத்துணர்வூட்டும் கதிராய்
இயற்கையின் மடியில்
இறந்து கொண்டே பிறக்க இருக்கிறேன்....