Sunday, October 25, 2015

சிறுபான்மையினர்



கடவுள் ஒதிக்கிவைத்த வாழ்க்கையா
 இல்லை
சாத்தன் ஒ(ஓ)திக்கிவைத்த வாழ்க்கையா?
ஏதோ ஒன்று,
கடைசியில் தீர்மானம் ஆனது.
மொத்ததில் ஒதுக்கப்பட்ட வாழ்க்கை
ஒன்று சிறுபாண்மையினர் என்ற சிறைக்குள்,
இங்கிருந்த இவனுக்கும்
அங்கிருந்த அவனுக்கும்.
 "இ" யும் "பா" வும் இனி
"இனிப்பா"கா முடியாது என்ற
எண்ணத் திரைக்குள் பொய்யாய் சிரித்தன. 

Wednesday, March 4, 2015

துரோக வலி











வெளியேற்ற நினைக்கும் எச்சிலை விழுங்குவது போல்
மன்னிக்கிறேன் உன் தவறுகளை.
அமிலமாக என்னை கரைக்கிறது
நான் உள்ளுக்குள் உருகினாலும்
இதயம் மட்டும் ஏனோ உனக்காக
துடிக்க எஞ்சிக்கிடக்கிறது
தவறுகளின் மூலம் நீ
தண்டனை மட்டும் ஏனோ
எனக்கே அளிக்கப்படுகிறது எப்போதும்
கட உள் என மனதை கட்டுப்படுத்தினாலும்
கடவுளுக்கும் கலங்கா உன் துரோகங்களை
கடந்து செல்ல முடியவில்லை
பிரிய துடிக்கும் சிறகுகளின் அடக்கப்பட்ட வலி
துரோக வலியைவிட குறைவுதான் என
நீண்டு கிடக்கிறது மரண வலிகள் மனமேங்கும்.
கடைந்தேடுக்கும் துயரங்களின் மிச்சத்திலிருந்து
வலிகள் விடுபட வெளியேறுமோ என வாழ்க்கை.

Sunday, January 18, 2015

துரோகி உனக்காக




துரோகக் களிப்பில் நீ கொடுக்கும் முத்தம்
         என் உதடுகளை எரிக்கின்றது
மனைவி என்ற அந்தஸ்திலிருந்து இரங்கி
         உன் தவறுகளுக்கேல்லாம் என்னை சாட்சியாய்
நிற்கும் பொம்மையாக்கினாய்.
         முன்பு உன் சிறு சபரிசத்தில் பூத்த என் உணர்வுகள்
இன்று உன் தொடுதலில் கருக செய்கிறது.
         உன் புண்ணகையின் விஷமத்தனத்தை புரிந்தபோது
நீ கிஷ்ணனாக இல்லை ராவணனாக தோன்றினாய்.
         கண்மூடி தியானிக்க நான் ஞானியல்ல
கண்ணிருந்தும் உன்னால் பார்வையிழந்த
         விட்டில் பூச்சியானேன் 
                        உன் பின்னால் செல்ல.....

Monday, December 29, 2014

காய்ச்சல்

காய்ச்சலில் என் உடல்
தகித்துக் கொண்டிருந்த போது
குளிர்ந்த நீரில்
மூழ்க வைத்தாய்
உடல் சூட்டைக் குறைக்கவே
அவ்வாறு செய்தாய் என
சமாதானப் படுதிக் கொண்டேன்
மார்கழிப் பனி வெளியில் கொட்ட
ஜலதோஷம் என் நாசியில் கொட்ட
எனக்குப் பிடிக்கும் எனச் சொல்லி
பனிக்கூழ் ஊட்டிவிட்டாய்
அதை உன் அன்பு என்றே
எண்ணியிருந்தேன்
வயிற்றுவலியில் படுத்திருக்க
சமைக்க வேண்டாம் என
கரிசனம் காட்டி பரோட்டா குருமா வாங்கி வந்தாய்
என் மீதான அக்கரை என்றே
இருமாந்தேன்
தூங்க முடியவில்லை
நீ வருந்துவாயே என
தூங்குவது போல நடித்திருந்தேன்
நீ மிகச் சரியாகக் (!) கேட்டுவிட்டாய்
நான் காய்ச்சல் வந்தது போல்
நடிக்கிறேன் என
இரண்டாம் முறையும் என்னை
சிலுவையில் அறைய
துரு ஏறிய ஆணிகளை வைத்துக் கொண்டு
என்னை சுத்தியல் தேடச் சொல்கிறாய்
அதையும் உனக்காகவே தேடிக் கொண்டிருக்கிறேன்
உனைப்பற்றிய உன்மைகள்
உரைத்த போதும்
நான் நம்ப விரும்பவில்லை...
இதைப் படிக்காமலேயே
அடுத்த கேள்வியும் கேட்பாய்
கவிதை எழுத முடிந்த உனக்கு காய்ச்சலா? என்று
பி(ப)டிக்காத உனக்கு விளக்கம் சொல்லிப் பயனில்லை
கவிதை உடல் சார்ந்ததல்ல
மனம் சார்ந்த ஒன்று என்று ...

Monday, November 3, 2014

அன்பைத் தேடி













கடற்கரை மணலில் தொலைந்து போன பாதச் சுவடுகளாய்
இப்போது நாமிருவரும்
கிடைக்க நேரமின்றி தவிக்கும் மணிமுள்ளாய்
ஓடிக்கொண்டிருந்தாலும்
மனச்சுவரின் கிறுகலில் நம் பெயர்
பொறித்திருக்கிறது எப்போதும்.
நிலத்தில் விழுந்த மழைத் துளியைத் தேடி
தாகம் தனிக்க எண்ணுவது போல்
நாம் தேடுகிறோம் வாழ்க்கையை.
கிடைத்த போழுது கைக்குள் பொத்திவைக்கத்
தவறிய பனித்துளியை
காய்ந்த நிலத்திற்கு உயிராகவேனும் விட்டுவிடு
நிலமாவது தாகம் தனிக்கட்டும்.
காய்ந்த கடற்கரையாய் நான் இருந்துவிட்டு போகிறேன்
வாழ்வை விதி குடிக்கும் வரைக்கும்.

Tuesday, September 9, 2014

கேள்வியும் நீ பதிலும் நீ















இமையோரம் காத்திருக்கும் கண்ணீர் துளி
துடைக்கப்படாமல் இருக்கிறது உன் கைகளுக்காக.
நீர் நிரம்பிய கண்களுக்கு தெரியவில்லை
நீ வருகிறாயா திரும்பிச் செல்கிறாயா என.
கற்றுக்கொண்டு விட்டது சிந்தாமலும் சிதறாமலும்
உனக்காக தவமிருக்க என் கண்ணீர் துளிகள்
உன் காலுக்கடியில் இருக்கும் புல்லாய் பார்க்கபடுகிறேன்
ஆனால் என்னுள்ளோ நெருஞ்சி முள்ளாய் குத்தப்படுகிறேன்
விடை தெரியா கேள்விகள் பலவாயினும்
என்னுள் எழுந்த பெரிய கேள்வி நீ
பதிலும் நீ.
நீண்ட இடைவெளிவிட்டு நடக்க பழகிக்கொண்டோம்
தண்டவாளம் போல் ஒன்றாக செல்ல அல்ல
கடைசி வரியில் காணாமல் போன எழுத்துக்களாய்….


Thursday, September 4, 2014

அச்சிடப்படாத வாழ்க்கை:













மனது பறக்கிறது லேசாகிறது கனக்கிறது துவள்கிறது
கணப்போழுதில் இத்தனையும் உன்னாலே.
சந்தோஷமும் சோகமும் ஏக்கமும் கலந்த உன் நினைவுகளை
 நான் என்செய்வேன்.
எழுதப்படாத கவிதைகளை நினைத்து ஏங்குகிற
கவிஞன் போல் ஏங்கி சாகிறேன் தினமும்.
நிலை தடுமாறிய பேனா முள்ளாய் நெஞ்சம்
காகிததில் ஒட்ட வைக்க பார்க்கிறேன் வார்த்தைகளை.
அச்சிடப்படாத அவ்வார்த்தைகளை கோர்த்து காத்திருக்கிறேன்
என்றேனும் நம் வாழ்கை என்னும் புத்தகத்தில் அச்சிடுவாய் என…