Friday, October 5, 2018

இலையுதிர் காலம்


பூக்களிடத்திலும் சொல்லவில்லை 
என் மனக்கேதங்களை.
பின் எவ்வாறு தெரிந்தன  

வண்ணங்கள் மாறாவிடினும் 
இலைகளை பிரிந்து உதிந்தன 
என் மனப்பிளவை ஒத்தவாரு...?

வாசனையற்ற பூக்களாய் தெருவோரம் உதிர்ந்து, 
வண்ணங்கள் இழக்கும் தருவாயில்.... 
எதற்கும் இருக்கட்டும் என 
எதற்கு மாலை தொடுற்கிறாய்...?

உதிர்ந்த பூக்கள் மீண்டும் மரங்களில் சேர்வதில்லை. 
இலையுதிர் காலம் வரை காத்திருக்கின்றன. 
இலைகளுக்கும் பூக்களின் வலி புரியும் வரை.