Tuesday, December 7, 2021
Friday, November 19, 2021
அம்மா
என் திசையாவும் உன்னில் முடியும்
என் விழியோர பார்வை கூட உன்னை தேடும்
என் வழியாவும் உன்னை வந்து சேரும்
என் வருங்காலம் உன்னில் துவங்கும்
மனம் ஏங்கும் முப்பொழுதும்
இமைக்கும் நொடி கூட பிரியா வரம் வேண்டும்!
என் பிறப்பினூடே உன் மறுபிறப்பு பெற்றவள். உன் உடல் ஒட்டி வளர்ந்தேன். உன் உயிர் பற்றி கிடந்தேன். விதி பற்றி செல்லும் வாழ்க்கையில் உன் ஓர் விரல் பற்றி சொல்லும் வழி வேண்டும் அவ்வளவே!
இன்று அன்னையானவள் சேயானாள். பற்கள் அற்ற வார்த்தைகளில் மழலை மொழி கற்றேன்.
உன் சேயாய் துவங்கிய என் வாழ்வில் ஓர் அழகிய பிறழ்வு...
நான் இன்று தாயானேன் உனை சீராட்டி தாங்கும் தருணத்திற்காகவே...!
Subscribe to:
Posts (Atom)