அப்போதுதான் எனக்கு ஆத்திரம் தாங்காமல் யாருடி அவ்ளோ பெரிய ஆளு? நான் பேசறேன். ஒத்துக்கொண்டால் சரி இல்லை என்றால் அப்பாவின் மானத்தை காப்பாத்த மண்டபத்திற்கு போ என சொன்னதும் அவள் என்னடி இப்படி கேட்கற உனக்கு தெரியாதா நான் பி.டியை விரும்புவது என்றாள்.
எனக்கு தரை நழுவியது. பூகம்பம் வந்தது போலவே தோன்றியது. என்னால் நம்ப முடியவில்லை என் தோழி இவள் நான் விரும்புபவனையா காதலிக்கிறாள் அவனுக்காகவா இவ்வளவு பாடுபடுகிறாள் என்றதும் மனதில் இருந்த ஏதோ ஒன்று கழன்று விழ உணர்ந்தேன்.
இப்பவும் ஒர் வாய்ப்பு இவள் அப்பாவுடன் சமாதானம் செய்து மண்டபத்திற்கு செல்ல சொன்னால் இவளால் ஒன்றும் செய்ய இயலாது அடுத்து அவள் அப்பாவின் பிடிவாதத்தால் திருமணம் நடந்துவிடும். பின் நமக்கான பாதை வெளிச்சத்துடன் காணப்படும் என்று எண்ணத்திற்கூடே மனசாட்சி மனதிலிருந்து எட்டிபார்க்க, நானே பி.டிக்கு ஃபோன் செய்தேன். இவளுக்காக வார்த்தை வராமல் பேசினேன். பேச பேச என்னையறியாமல் என் தோழிக்காக பரிந்து பேச ஆரம்பித்தேன். கடைசியில் நேரில் சென்று பேச அவர் சம்மதித்தார். அதே திருமண்டபத்தில் அவள் கழுத்தில் இவர் கட்டிய தாலியுடன் சிரித்த முகத்துடன் என்னை பார்த்தாள்.
மண்டபத்திலிருந்து விடைபெற்று பழய நினைவுகளிலிருந்து விடுதலை பெற்று மன நிறைவுடன், தெளிந்த வானத்தை பார்த்தேன். மனதின் பிரதி பிம்பமாய் தோன்றியது. இவள் என்றும் என் தோழி. மாற்றமில்லாமல் என்றும் தோழமையுடன் நானும்.
எனக்கு தரை நழுவியது. பூகம்பம் வந்தது போலவே தோன்றியது. என்னால் நம்ப முடியவில்லை என் தோழி இவள் நான் விரும்புபவனையா காதலிக்கிறாள் அவனுக்காகவா இவ்வளவு பாடுபடுகிறாள் என்றதும் மனதில் இருந்த ஏதோ ஒன்று கழன்று விழ உணர்ந்தேன்.
இப்பவும் ஒர் வாய்ப்பு இவள் அப்பாவுடன் சமாதானம் செய்து மண்டபத்திற்கு செல்ல சொன்னால் இவளால் ஒன்றும் செய்ய இயலாது அடுத்து அவள் அப்பாவின் பிடிவாதத்தால் திருமணம் நடந்துவிடும். பின் நமக்கான பாதை வெளிச்சத்துடன் காணப்படும் என்று எண்ணத்திற்கூடே மனசாட்சி மனதிலிருந்து எட்டிபார்க்க, நானே பி.டிக்கு ஃபோன் செய்தேன். இவளுக்காக வார்த்தை வராமல் பேசினேன். பேச பேச என்னையறியாமல் என் தோழிக்காக பரிந்து பேச ஆரம்பித்தேன். கடைசியில் நேரில் சென்று பேச அவர் சம்மதித்தார். அதே திருமண்டபத்தில் அவள் கழுத்தில் இவர் கட்டிய தாலியுடன் சிரித்த முகத்துடன் என்னை பார்த்தாள்.
மண்டபத்திலிருந்து விடைபெற்று பழய நினைவுகளிலிருந்து விடுதலை பெற்று மன நிறைவுடன், தெளிந்த வானத்தை பார்த்தேன். மனதின் பிரதி பிம்பமாய் தோன்றியது. இவள் என்றும் என் தோழி. மாற்றமில்லாமல் என்றும் தோழமையுடன் நானும்.