Thursday, November 8, 2012

கிளிஞ்சல்கள்
















நினைவு திரும்புகையில்
கரும்பலகை மனதில்
சில கோடுகள்.
நீண்ட கோடுகள் நெஞ்சம் கிழிக்க
சிறு கோடுகளோ இதயத்தை பிளந்தது.
சில மணிதுளிகளை நிந்தித்ததால்
கணவுகளில் மன்னிப்புகள் பகிர்ந்து கொள்ளப்பட்டாலும்,
கடல் அலைகளின் கிளிஞ்சலகளாய்
அலைக்கழிக்கப்பட்டு எங்கோ ஒதுங்கினோம்.
நம்மை தேர்ந்தெடுத்து கலைந்த மனிதக் கூட்டம்
கடலில் தூக்கி எரிந்து விளையாட
மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன்
ஒற்றையில் அலையாடுகிறேன் வருடக் கணக்கில்...






2 comments:

  1. என்ன பாடுபடுகிறது... வரிகள் அருமை...

    ReplyDelete
  2. மிக்க நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்....

    ReplyDelete