Wednesday, August 27, 2014

நீ என்னும் நிஜம் வேண்டும்



















ஒரு முறை ஒரே ஒரு முறை
உன் தோளில் சாய்ந்து அழுவதற்கு அனுமதி கொடு.
என் கண்ணீர் வற்றும் வரை அல்ல
என் சோகங்கள்  கரையும் வரை
வேண்டும் உன் தோழமை நிறைந்த உன் தோள்கள்.
வெட்டி எறிந்தாலும் வேர்விட்டு கிளம்பி
நெருஞ்சி முள்ளாய் கிழிக்கும் நிஜங்களை
சில நிமிடங்கள் உன் நிழலில் தள்ளிவிட்டு
இளைப்பாருகிறேன் கணவிலேனும்.
உன்னிடம் சில நிமிடங்கள்
என்னிடம் சில நிமிடங்கள்
இருந்துவிட்டு போகட்டும் காயங்கள்
நம் இருவரையும் ஒரே கோட்டில் சேர்க்க.
நியாயத்தின் வெடிப்பில் பூக்கும் நிம்மதி வேண்டும்
பொய்யாய் மகிழ்ந்து பொய்யாய் நெகிழ்ந்த
தருணங்களை புதைக்கும் நிஜம் வேண்டும்.
ஒரு முறை ஒரே ஒரு முறையேனும்
உண்மையாய் வாழ வேண்டும்.
நீ வேண்டும்
நீ என்ற நிஜம் வேண்டும். 

3 comments:

  1. வணக்கம்
    காதலியை உருகி வடித்த வரிகள் மிக அற்புதம் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு.ரூபன் அவர்களே!

    ReplyDelete
  3. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு.கண்ணன் சீதா ராமன் அவர்களே!

    ReplyDelete