Tuesday, September 9, 2014

கேள்வியும் நீ பதிலும் நீ















இமையோரம் காத்திருக்கும் கண்ணீர் துளி
துடைக்கப்படாமல் இருக்கிறது உன் கைகளுக்காக.
நீர் நிரம்பிய கண்களுக்கு தெரியவில்லை
நீ வருகிறாயா திரும்பிச் செல்கிறாயா என.
கற்றுக்கொண்டு விட்டது சிந்தாமலும் சிதறாமலும்
உனக்காக தவமிருக்க என் கண்ணீர் துளிகள்
உன் காலுக்கடியில் இருக்கும் புல்லாய் பார்க்கபடுகிறேன்
ஆனால் என்னுள்ளோ நெருஞ்சி முள்ளாய் குத்தப்படுகிறேன்
விடை தெரியா கேள்விகள் பலவாயினும்
என்னுள் எழுந்த பெரிய கேள்வி நீ
பதிலும் நீ.
நீண்ட இடைவெளிவிட்டு நடக்க பழகிக்கொண்டோம்
தண்டவாளம் போல் ஒன்றாக செல்ல அல்ல
கடைசி வரியில் காணாமல் போன எழுத்துக்களாய்….


No comments:

Post a Comment