Wednesday, March 4, 2015

துரோக வலி











வெளியேற்ற நினைக்கும் எச்சிலை விழுங்குவது போல்
மன்னிக்கிறேன் உன் தவறுகளை.
அமிலமாக என்னை கரைக்கிறது
நான் உள்ளுக்குள் உருகினாலும்
இதயம் மட்டும் ஏனோ உனக்காக
துடிக்க எஞ்சிக்கிடக்கிறது
தவறுகளின் மூலம் நீ
தண்டனை மட்டும் ஏனோ
எனக்கே அளிக்கப்படுகிறது எப்போதும்
கட உள் என மனதை கட்டுப்படுத்தினாலும்
கடவுளுக்கும் கலங்கா உன் துரோகங்களை
கடந்து செல்ல முடியவில்லை
பிரிய துடிக்கும் சிறகுகளின் அடக்கப்பட்ட வலி
துரோக வலியைவிட குறைவுதான் என
நீண்டு கிடக்கிறது மரண வலிகள் மனமேங்கும்.
கடைந்தேடுக்கும் துயரங்களின் மிச்சத்திலிருந்து
வலிகள் விடுபட வெளியேறுமோ என வாழ்க்கை.

2 comments:

  1. வணக்கம்
    காதல் கவிதைக்கு ஒரு மவுசுதான் வுரிகள் நன்று இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: சிறுகதைப்போட்டியின் வெற்றியாளர்கள்..-2015:                         

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. நன்றி திரு.ரூபன்

    ReplyDelete