Saturday, November 28, 2015

பெண் தோழி


                                                                           (3) 

அவன் பார்க்கும் பார்வையை தாங்க முடியாமல் ரகு விழுந்து விழுந்து சிரித்த போது இன்னும் ஒன்றும் புரியாமல் குழம்பிப் போனான். பிறகு மெல்ல வாயை திறந்து, 'ரகு எனக்கு ஆச்சர்யமாக இருக்கு. நீயா? நீயா இப்படி பேசினே? எப்படி அந்த அழகான தேவதையை வேண்டாம்னு ஒதறிதள்ள முடிஞ்சது உன்னால? என்னால நம்பவே முடியலை. சாதாரண துணை நடிகையா இருந்தாலும் உனக்கு பிடிச்சுருச்சுன்னா விடமாடே, உடனே டேட்டீங் கிளம்பிடுவே. இன்னைக்கு என்ன ஆச்சு உனக்கு? நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிட்டியே இப்படி.' என  புலம்பாத குறையாக கூற,
அதற்குள் தனது வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்து முடித்துவிட்டு ரகு, "நான் என்ன முட்டாளா? இப்படி ஒரு ஃபிகர் தானா வந்தா சும்மாவிட? எல்லாம் காரணம் இருக்கு". என கூறும் போதே ஷாட் ரெடி என அழைப்பு வர இருவரும் போனார்கள்.

இங்கு ரகு வீட்டில்....
" அய்யோ அம்மாடி ரதி, என்னால அந்த ருத்திர மூர்த்தி எதுர்க்க நிற்க முடியலை, என்ன ஒரு ஆவேசம், கோவம். நான் எழுதினதை படிச்சதும்...அப்பாப்பா... என்னால இனி இந்த ஜென்மத்துல அவர் முன்னாடி போய் நின்னு நான் உங்க தீவிர விசிறினு சொல்லகூட முடியாத மாதிரி பண்ணிடியேடி, ஏன் தான் உனக்கு போய் நான் ப்ரண்டா ஆனேனோ தெரியலை போ..." என அந்த தேவதை பெண் ரதியிடம் கூறி அங்காலாய்த்தாள்.
ரதி,"இல்லடி மேகா, நீதான் நான் வச்ச டெஸ்ட்க்கு சரியான ஆள். உன் அழகுக்காக எத்தனை ஆம்பிளைங்க உன்ன பின்னாடி வந்திருக்காங்க. ஒரு நிமிடமாவது தடுமாறமாட்டாங்க. அதுக்குத்தான் அவரை பார்க்க உன்னை அனுப்பினேன். இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்குடி. அவரை பத்தி அங்க இங்க கேள்விபட்டது, பத்திரிகைல படிச்சதுனு ரொம்ப குழம்பி போயிருந்தேன். நல்ல வேளை என் புருஷன் உத்தமன் தான்" என கூறி இருவரும் சேர்ந்து சந்தோஷத்தை ஐஸ்கிரிம் சாப்பிட்டு கொண்டாடிக் கொண்டிருந்த அதே வேளையில்,

இடைவெளியின் போது மீண்டும் நனது ஹீரோ பேக் டு தி பாய்ண்ட் வந்து கேள்விகளை அடுக்க, ரகுவும் ஏளன சிரிப்புடன், " என் பொண்டாட்டிக்கு கொஞ்ச நாளா என் மேல சந்தேகம்னு அவ ஆக்ட்டிவிடீஸ்லயே தெரிஞ்சுகிட்டேன். இப்படி ஏதாவது செய்வானு எதிர் பார்த்தேன். அதான் நடந்துச்சு"  என்றான் கூலாக.
ஹீரோவும் விடவில்லை, "ஹே... அது சரி...இருந்தாலும்.... எப்படிடா இந்த ஃபிகர்னு கண்டுபிடிச்ச" என்றான்.
ரகு, " நாமெல்லாம் யாரு....?! கல்யாணத்தன்னைக்கு என் பொண்டாட்டியோட ப்ரண்ட்ஸ்லயே இவதாண்டா ரொம்ப அழகு. அன்னைக்கே பிராக்கேட் போட நினைச்சேன். முடியலை. ஏன்னா... மேடயவிட்டு எழுந்திரிக்க கூடாது, நீதான் கல்யாணப் பையனு அப்பப்போ வாத்தியார் நியாபகபடுத்திகிட்டேருந்தார். அதான் அன்னைக்கு மிஸ் ஆகிடுச்சு. மறக்க முடியுமா இவளையெல்லாம் ஹும்ம்ம்....சொல்லு? என கேட்டு சிரித்து, "ஆனா இவளையே என் அருமை பொண்டாட்டி என்கிட்டயே நடிக்க அனுப்பியிருக்கா பார். முட்டாள்... என மீண்டும் உறக்க சிரிக்க, ஷாட் ரெடி என கூவிய குறலுக்கு அங்கும் நடிக்க சென்றான் அந்த அபார நடிகன்.
                                                               
                                                                        முற்றும்.

No comments:

Post a Comment