Sunday, August 19, 2012

சாகா வரம்





















நெருங்கி நின்ற வார்த்தைகள்

நம் பிரிவை ஓதுகின்றன.

நாம் ஒன்றாய் இருந்த நினைவுகள்

விசிறி மடிப்புகளாய் விரிந்து கிடக்கின்றன

சுருங்கி விரியும் தொட்டாசிணுங்கி இலையாய்

மனதில் துளிர்த்த வெட்கம்

இப்போது சுருங்கி கிடக்கிறது

துளிர்த்ததின் நடுவில் கருவேலமுள்லாய்

உன் துரோகம் பரவிக்கிடக்கிறது

வருடங்கள் கரைந்து போகின்றன

படிகளாக பதிவுகளை மட்டும்

மறக்காமல் இட்டுக்கொண்டு...

நினைவுகள் சாகா வரம் பெற்றவையாக

என் நிஜங்களை சாகடித்துக்கொண்டு.....

No comments:

Post a Comment