Wednesday, September 18, 2013

நிசப்தத்தின் சப்தம் (அத்தியாயம் 4)

என்ன சொன்னீங்க? நம்ம குழந்தையை போய் கொண்ணுடுவேன்னா சொன்னீங்க!?அத்திரத்துடன் கேட்டாள் சுஜாதா.
இல்...இல்ல... இல்ல சுஜா நான்... வந்து... எனக்கு எப்படி குழந்தையை சமாதனபடுத்தறதுன்னு தெரியல. அதான் என தினறி தினறி பேசி முடித்தான்.
இருந்தும் ஆவேசம் வந்தவளாய் பால் பாட்டிலுடன் வந்து நங்கென்று அவன் தலையில் வைத்து, “ இதோட இப்படி பேசுறத நிறுத்திருங்க, இல்ல நான் ராட்சசியா மாறிடுவேன்”, என்று குழந்தையை தூக்கிக்கொண்டு அப்பால் சென்றாள்.
இப்ப மட்டும் என்னவாம்என முனு முனுக்க, அதை கண் அடித்து சிரித்து வெறுப்பூடிடியது குழந்தை. இனியும் அதன் அட்டகாசம் பொறுக்காது என திட்ட்மிடலானான் தருண்.

சுஜா கடைவீதிக்கு சென்றிருந்த நேரம் பார்த்து,

“உட்காரு உன்கிட்ட பேசனும்என்றான் தருண்.

எனக்கு தூக்கம் வருது இப்போ என்னால் உட்காரமுடியாது. ஏன்னா நான் கை கொந்தே தம்பிஎன பல்லில்லா ஈரை காட்டி கேலி செய்த்து குழந்தை.

“சரி படுத்துகிட்டே பதில் சொல்லு எப்படி இருந்தாலும் எனக்கு நீ பேசற ரகசியம் தெரிஞ்சுக்கனும்என ஆவேசமுடன் கூறினான் தருண்.

இனி இவன் விடாகொண்டனாகிவிட்டான் என தெரிந்த்தும் குழந்தை,
“சரி ஆனா நார் கிட்டையும் சொல்ல கூடாது சரியா? இந்த டீலுக்கு ஓகே வா? என கிண்டல் அடித்த்து.

சாதுர்யமாக எரிச்சலை அடக்கிக்கொண்டு தருணூம், “சரி, ஓகே....ஓகே....சரி. விஷயத்துக்கு வாஎன்றான்.

அது என்னப்பா... சரி ஓகே....சரி எல்லாம் ஒண்ணுதானே?! இப்போ மாத்திட்டாங்களா என்ன? என மேலும் வெறுப்போற்ற எரிச்சலின் உச்சத்திற்கே போய்விட்டான் தருண் ஆனாலும் பல்லை கடித்துக்கொண்டு இந்த அதிசயத்தை, ரகசியத்தை இதனிடமிருந்து கரப்பது என முடிவு செய்து திரும்பவும் அதே கேள்வியை அமைதியாக வினவினான்.


“ஹேய் சரி உன் ஜோக்...ஹா...ஹா...ஹா...சிரிச்சுட்டேன் போருமா? இப்போ சொல்லு, என கேட்க, “எதை கொல்ல சீ...சீ...சொல்ல சொல்லறே? என புரியாத்து போல விழித்த்து குழந்தை.
“உம்ம்ம்ம்...சரி, உன்கிட்ட முன்னாடியே கேட்டேன். எப்படி நீ இந்த் வயசிலேயே பேசற, உனக்கு மட்டும் அப்படி ஒரு சக்தியா? என் குழந்தைக்கு இப்படி ஒரு சக்தியிருந்தா எனக்கு பெருமைதானே....? நீயே சொல்லு. அதனால் எல்லாத்தையும் அழகாக நீ சொல்லுவியாம் நானும் நீ பேசறதையே ஆச்சர்யமா பார்பேனாம் சரியா? எங்க சொல்லு...சொல்லு பார்க்கலாம்? என குழய,
குழந்தையிடம் ஓர் நக்கலான சிரிபொன்று உதிர்ந்த்து. தொடந்து, “சரி நீ இவ்வளவு ஆசபடுற, நான் சொல்லறேன். எனக்கு இன்னும் பழய் ஜென்மத்து ஞாபகம் போகல, எல்லா குழந்தைக்கும் இருக்கும் ஆனால் நான் ஒரு மாந்திரிகன். அதனால என்னால நினைக்க மட்டும் இல்ல பேசவும் முடியுது.
நான் இந்த உடல்ல பிறந்தேனோழிய எனக்கு பழய சக்தி இன்னும் இருக்கறத நான் இழக்க விரும்பல.

தன்னையும் மறந்து குழந்தை சொல்வதை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் கண் இமைக்க மறந்தவனாய் அந்த மாந்திரிக குழந்தையையே பார்த்துக்கொண்டிருந்தான்.

No comments:

Post a Comment