Thursday, May 31, 2018

வானவில்


நீ பிறந்தாய் வானவில்லாய்
அங்கு ஏழு வண்ணங்கள் மாட்டும் இல்லை
என் வாழ்வின் அனைத்து வண்ணங்களும்
அப்போதே சேர்ந்து பிறந்துவிட்டன…
சில நிமிடங்கள் வர்ணஜாலம் காட்டி
மறைந்து, நிறமிழந்து போகும்
வானவில் அல்ல நீ
பலரின் உயிரில் வண்ணமேற்றும் தூரிகை நீ
எட்டா கணியாய் மேகத்தினுள்ளே ஓடும்
வானவில் அல்ல நீ
யாவருக்கும் வளைந்து கொடுக்கும்  
பக்குவம் பெற்றவன் நீ
மலர்ந்து விரிந்து கண்களில் குளிர்ந்து
மனதில் நிறைந்து நிற்கிறாய் என்றும்
உன் உயரிய பண்பால்
உன் நட்பெனும் மழை நீரீன் கம்பிகளை
பிடித்துக் கொண்டு சூரியனுக்கு
நிகராய் மின்னும் உன் வானவில் வாழ்க்கையில்
ஒர் நிறமாய் மாற ஆசைப்படுகிறேன்,
சாயம் போகா நம் நட்பின் மீதுள்ள நம்பிக்கையால்

No comments:

Post a Comment