Thursday, May 31, 2018

விடிவெள்ளி நீ













விரிந்து கிடக்கும் விண்மீன்களை பந்தென சுருட்டி
உள்ளங்கையில் ஒளித்து
நிறம் மாறும் முன்
நித்திரைக்கு துணையாய் தந்துவிட்டு
கணவுகளில் மட்டும்
வானவில்லின் வர்ணங்களை சிதரவிட்டாய்

வெறிச்சோடிப் போன என் தெருக்களில் மாவிலை தோரணங்களை
வாசனை பூக்களோடு பேசவிட்டாய்
திருவிழா பூண்டது என் மனகிராமம்

நீரில் மிதக்கும் தாமரை இலையாய்
ஒட்டியும் ஒட்டாமலும்
கழிந்த நேசங்களை ஒன்றினைத்து
தாமரை பூக்களாய் மலரவிட்டாய்
உன் சூரியக் கிரணங்களால்

நீண்ட நெடுந்தூரம் ஆகிப்போன
என் பிரியங்களை
மீட்டெடுத்து உன்னில் முடியவைத்தாய்

தேடி தொலைத்த மொழியாக
என்னை விட்டு சென்ற
நிழலாக
தனித்திருந்த என் தனிமைக்கு
தொலைதூரத்து விடிவெள்ளி நீ

No comments:

Post a Comment