Monday, May 20, 2019

வெப்பம்




வெட்டப்பட்ட மரங்களின்
பெருமூச்சுதான் அனல் காற்றாய்
நமை எரிப்பது

காய்ந்த குளங்களில் மடியில் மடிந்திருக்கும் மீனின் உடலை புழுதிக்காற்று அடக்கம் செய்தது.

கோடை காலங்கள்  நன்கொடையாகமல்
பறவைகளின் தீப்பிடித்த இறகுகளில் நாம் எரித்தெறிந்த தீக்குச்சிகளின் பங்கும் ஒட்டியுள்ளன

வீட்டிற்கொர் மரம் வளர்க்கும்
திட்டம் மறக்கப்பட்டு
வீட்டிலுள்ளோர் மரமாயினர்
தேக்கு, சந்தன, செம்மரங்களாய் சிலையாயினர்...

தட்டுகள் தங்கமாய் மின்னாவிடினும்
அதற்கான நோக்கம் அழியாமல் இருக்கட்டும்

விவசாயிகளின் கண்களில் மட்டும்
பெய்யும் மழை
இனியேனும் வானில் இருந்து
பொழியட்டும்

No comments:

Post a Comment