Thursday, November 10, 2011

மனப் புழுக்கம்




உன் மனபுழுக்கத்ததை மறைத்துவைத்த
புயல்களை நேசிக்க முயன்று

மறைந்த துகள்களுக்குள்
மண்டியிட்டு நான் அமர்ந்தேன்.

அப்போதும் மலர்ந்த பூவுக்குளிருப்பதாய்
நான் உணர்ந்தேன்.

கண்களுக்கு வேலி போட்டு
நினைவுகளை கட்டவிழ்த்தாய்.

நெருப்பிலும் உன்னுடன் வர‌
மறுப்பில்லை எனக்கு.

என் ஜென்மம் போனாலும்
உனை தொட‌ர‌ என் நிழ‌ல் போதும்.

எட்டிக்காயோ என
எட்டி நின்ற காலத்திலும்

மனதின் ஓரத்தில்
முட்களுடன் நீ வளர்ந்தாய்

பூ பூக்கும் காலம் வரை
வாடாமல் உனை காக்க‌

உன்னுடன் மலர நினைத்து
நிழலாகவே பின் தொடர்ந்தேன்.

என்றேனும் என் மன புழுக்கத்தையும்
நீ அறிவாய் என.

2 comments:

  1. அப்படி வச்சுக்கிட்டே இருப்பதை விட இதுவா என்று கேட்டு விடுதல் மனதிற்கு நல்லதொன்று அன்றேல் சிக்கல் நமக்குத்தான்.

    ReplyDelete
  2. கருத்திற்கு நன்றி சிவா! :)

    ReplyDelete