Saturday, October 29, 2011

சாலையொர பூக்கள்
















காலச் சுமை போல் பலரது
காலடி சுவடு உன் மீது.

வெய்யிலும், மழையும் இவ்வாறா
உன்னை ஆதரிக்க வேண்டும்...?

பெற்றவள் மடியில் ஏற்கவில்லை
பாரமெனகருதி மண்ணில் உதிர்த்துவிட்டாள்

இயற்கையாய் உன் வாசம்
உயிரிழக்கும் முன்,
வண்ணங்கள் தோய்ந்த உன் உடல்
வலுவிழக்கும் முன்,
எந்த செலவுமின்றி புதைக்கப்பட்டாய்

உற்றார் உறவினர்களாய் காரியம்
செய்த வாகங்களும்
மற்றபிற பயில்வான்களும்
நன்றி தெரிவித்துவிடு

நல்லவேளை உங்களில் ஒருவனாய்
பாவக்கணக்கில் மிதிபடாமல்
இருந்தேன் என்று....

No comments:

Post a Comment