Friday, November 11, 2011

தொலைதூர‌ ப‌ய‌ண‌ம்




எனைவிட்டு நானே தூரச் சென்று கொண்டிருக்கின்றேன்
தொலைதூரப் பயணம்
உன்னைத் தேடி
உன் நினைவுக‌ளுட‌ன்.

க‌ருமேக‌ இருட்டில் உன் பாத‌ச்சுவ‌டு,
ம‌ழையில் நனையாம‌ல்
என் குடை பாதுகாப்பில் ப‌த்திர‌மாய்.

என்னை க‌டைந்தெடுக்கும் உன் நினைவுகளிலிருந்து
என்னை நானே விடுவிக்க‌ முடியாம‌ல்
அத‌னுள்ளேயே சுற்றிச் சுழ‌ல்கிறேன்.

க‌டையக் க‌டையத் திர‌ண்ட‌தென்ன‌வோ
க‌ச‌ந்த‌ நிஜ‌ங்க‌ளே.....

நீண்ட‌ வழித் தேட‌லில் கிடைத்த‌து
க‌ண‌க்கெடுக்க‌ப்ப‌டாத‌ என் வ‌லிக‌ள் ம‌ட்டுமே.

க‌ளைத்து நிற்கும் நேரம் கூட‌
க‌சைய‌டி கொடுக்கும் உன் ஏளனப் புன்னகை.

மீண்டும் என் பயணம் உன் பாதையில்
அதே புன்ன‌கையை
அன்பில் முடிக்க‌ எண்ணி.....!

1 comment:

  1. தீரா அன்பு வைத்தாலும் தலைவலிதான். திட்டி விட்டுச் சென்றாலும் தலை வலிதான். என்னைப் பொறுத்தமட்டில் பின்னதே பெஸ்ட். :)

    ReplyDelete