
மணமக்கள் தங்கள் திருமணத்திற்கு அழைக்கும் வரவேற்பு மடல்
எங்கள் மணவாழ்க்கையில் மணம் நிறைந்திட
மணத்துக்கொண்டிருக்கும் பூக்களே வாரீர்
எங்கள் வாழ்க்கைச் சக்கரம் நில்லாதோட
அச்சாணியாகிய சொந்தங்களே வாரீர்
நிலமகளும் இடம் தர, மலை மகளும் துணைவர
கலைமகளும் கை கோர்க்க வாழ்த்திட வாரீர்
இனிய தமிழில் இல்லறம் ஆரம்பிக்க
இந்த இனிய நாளில் வாழ்த்துப்பாட வாரீர்.
நீங்கா மணங்கொண்டு மாறா நற்குணங்ககொண்டும்
நிலைத்ததொரு வாழ்வைப் பெற வாழ்த்திட வாரீர்...!
அழைப்பிதழைக் கண்டவுடன் வந்த மகிழ்வு அதில் சொல்லப்பட்ட வார்த்தைகளை படித்தவுடன் மேலும் பற்றிக் கொண்டு நன்னடையிலே!
ReplyDeleteநல்லதொரு வரிகள். நயமொடு வேண்டல்.
நன்றி அக்கா பகிர்ந்தமைக்கு.
நன்றி சிவா வருகைக்கு!
ReplyDelete