Tuesday, December 13, 2011

தமிழ் மணக்கும் என் முத்தமிழ் மன்றமிது

கிளிஞ்சல்களின் சப்தங்கள் சங்கமித்த
என் கடற்கரையிது

குயில்களின் கிதங்கள் பரவிய
என் வனமிது

மணிகளின் ஓசைகள் நிரைந்த
என் கோயிலிது

கரவொலிகள் முழங்கிய
என் நகைச்சுவை கூடமிது

அறிவுரைகள் பகிரும்
என் முதிர்ந்த பள்ளியிது.

இரவுகளை ஒளிர்க்க செய்யும்
என் நட்சத்திர கூட்டமிது

வண்டுகளின் ரீங்காரங்கள் கரைந்த
என் பூந்தோட்டமிது

நெல் மணிகள் சிதரிய
என் வீட்டு களஞ்சியமிது

மழை கூட்டங்கள் சூழ்ந்த
என் கருநீல வானமிது

இதை விடுத்து வெருமைக்கு
நான் சென்றால் அங்கும்
ஏங்கி நிற்கும்
என் பாலைவனத்து மெளனமிது.

2 comments:

  1. கவிதையின் உவமைகள் அழகு வசு.. பாராட்டுகள்...

    ReplyDelete