Saturday, September 24, 2011

உடன்பிறப்பவள்...உயிரின் மறுபிறப்பவள்....


என் உறவாய் மலர்ந்த
உடன்பிறப்பவள்
என் உயின்
மறுபிறப்பவள்....

மலரிதழில் மழைத்துளியாய்
என்னை மண்ணில்
விழாமல் காப்பவள்...

பூவாசம் முள்ளிற்கும்
ஒட்டிக்கொள்வதுண்டு
எனக்காக முள்ளாய்
சில நேரம் நீ
மாறியதுமுண்டு....

விழியோரம் வழிந்திடும்
கண்ணீரும் உன்னால்
அன்பின் மழையாய்,
மகிழ்ச்சியின் சாரலாய்
கரைந்த்துண்டு...

நீ நீர் பூத்த நெருப்பாய்
நிலைத்திருக்கிறாய்
உன் கதகதப்பில் என்றும்
நான் குளிர்காய்வதற்கு....

கைக்கெட்டிய தூரத்தில்
வானவில்
நாம் கைகோர்த்த நேரத்தில்
சிரிக்கும்....

இனியும் நினைவில் வைப்பதற்கு
நிறைய நிஜங்கள்
காத்திருக்கின்றன...
வாழ்நாள் போதாது
உன் நிழலாய் நான் தொடர்வதற்கு....

No comments:

Post a Comment