Monday, September 26, 2011

வெளிச்சப்புள்ளி
















நினைத்த பொழுதே நனைத்த
துயரம் நீ
உன் உண்மைகள்
உன்னைவிட மோசம்
நிலைப்பதில்லை,
விரைவில் பொய்துவிடுகிறது
உன்னை போல.

காற்றலையாய் கலைந்த
நிகழ்வுகளை
தேடினாலும் காலம்
மீண்டும் தருவதில்லை

வாழ்ந்த நாட்களைவிட
உன்னை நினைத்து
கரைந்த நிமிடங்களே அதிகம்.

என் இருட்டில் வெளிச்சப் புள்ளியாய் நீ
புள்ளியாய் மட்டுமே...

2 comments:

  1. ஹி..ஹி..

    புள்ளியாய்த் தானே..! இருக்கட்டும் இருக்கட்டும்..

    அதே சமயம் பல புள்ளிகள் இணைதததே ஒரு கோடு.!

    ReplyDelete
  2. ஆமாம். ஆனால் சில புள்ளிகள் ஒன்றோடு நின்றுவிடக்கூடும் சிவா!

    கருத்திற்கு மிக்க நன்றி!

    ReplyDelete