Saturday, October 8, 2011

தனிமை


பாதையில் நடக்கவைக்கப்பட்டேன்
என் முன்னால் பூட்ஸின் ஓசை
‍சிறிது நேரத்தில், என் பின்னால்
தேய்ந்த செருப்பின் மேலும் ஒரு தேய்மானம்
இரண்டும் ஓய்ந்தது
தனியே என் பாதுகையின் பயணம்
மீண்டும் ஓசைகள் என் பக்கத்தில்
பைக்கின் பரவச ஓட்டம்,
என்‍‍‍‍‍‍‍ ஆகாயத்தை சற்றே கிழிக்க முயன்றவாறு
விமானத்தின் பிரம்மாண்ட வீரிடல்
அதுவும் ஓய்ந்தது ஒரு சில நிமிடங்களில்
மீண்டும் என் பாதுகையின்
பயணம். தனியாக... நிசப்தமாக...

தனிமை பிடித்தமானதாக இல்லை,
இப்பொழுது பழக்கமானது.

No comments:

Post a Comment