Monday, October 10, 2011

விரிசல்...


நாளும் போராடுகிறேன்
என்னில் கலந்துவிட்ட உன் நினைவுகளுடன்
பழகிவிட்ட நினைவுகளை
பிரித்தெடுக்க முடியாமல் வலிக்கிறது இதயம்

வீட்டினுள் இருக்கும்
நிறைந்த குடத்திலிருந்து
ஒரு துளி நீரைக் கூட
பருக முடியாத காக்கையாய்
வெளியிருந்து தவிக்கிறது உள்ளம்

நிகழ்கால நிஜங்களும்
இறந்தகால நினைவுகளும்
போட்டியிட....
பட்டிமன்றமானது மனம்.

உன் இதய ஓரதில் எங்கேனும்
நான் இருந்தால்....
நான் உடலால் மரணித்த பிறகு
செப்பனிடு என் கல்லறையை

அதுவேனும் உன் இதயத்தைப் போல
விரிசல் விடாதிருக்கட்டும்......

No comments:

Post a Comment