Tuesday, October 18, 2011

பொறுமைக்குள் சிக்கும் சினம்

குடையை கிழிக்கும் மழையாய்
என் சினத்தின் கணம்
தாங்காமல் உன் மனதை கிழிக்கிறது.

பொறுமை போத‌னை செய்யும் புத்தக‌ம்
என் சின‌ம் என்னும் புழுதிப் புய‌லுக்குள் சிக்கிக் கொண்ட‌து.

வழிவ‌ழியாய் வ‌ந்த‌ பழ‌மொழிக‌ளும்
ப‌ழியாய் புதைந்து போன‌து.

சீறும் பாம்பாய் சின‌ம் த‌லைதூக்க‌
சிறகொடிக்க‌ப்ப‌ட்ட‌ கிளியாய்
துள்ளும் உன் ம‌னம்.

உருகி உருகி வ‌ழியும் நெருப்புக் குழ‌ம்பாய்
என் நாக்கில் உருண்டோடி வ‌ரும் வார்த்தைக‌ள்
உன் உதிர‌ம் உறையும் வ‌ரை கொட்டிய‌து.

உண்மையை உண‌ர்ந்தும் உண‌ரா ஜ‌ட‌மாய்
நீ த‌ந்த‌ அன்பு சொற்க‌ளை
வ‌லியாக‌ நான் திருப்பித்த‌ர‌,
நிக‌ழும் நிக‌ழ்கால‌ம் இற‌ந்த‌கால‌மாகிய‌து.

ச‌வ‌மாய் வாழும் பொழுதுதான்
உயிர் பெற்ற‌ பொறுமைக்குள்
சிக்கிய‌ சின‌ம் சித‌றிப்போன‌து.

No comments:

Post a Comment