Tuesday, October 18, 2011

குளம்


நான் வற்றிப்போன குளமானது எப்போழுது...?

கல்லெறிந்தாய், தண்ணீர் மேலே வருமென்றா...?

வற்றிப்போக செய்துவிட்டு வயிற்றில் அடித்து என்ன பயன்...?

காய்ந்து கிடக்கும் என் நிலத்தில் சிறிய தவளையின் தேடல்

வழியை தேடியா....? விதியை தேடியா....?

என் மனசஞ்சலத்தின் வெளிப்பாடானது.

கட்டுண்டு கிடக்கும் கருவேலம்முள்ளும் என்னிடத்தில்,

எவரையும் காயப்படுத்த எண்ணாமல்.

க‌ற்க‌ண்டு சிரிப்பில் காகித‌ப்பூவும் என்னிட‌த்தில்

எவ‌ரையும் வ‌ர‌வேற்க‌ முடியாம‌ல்.

இவ்விர‌ண்டும் காலத்தின் அடியால் ம‌ரத்துக்கிட‌க்கும்

பாரங்க‌ற்க‌ளின் பாதுகாப்பில் எப்போழுதும் இணைபிரியாம‌ல்....

No comments:

Post a Comment