மத்தாப்பு சிதறலாய் மனது
சிதறிய துகள்கள்
காணாமல் போனாலும்
தூரத்தில் தெரியும் சிலநொடி சந்தோஷம்.
இருட்டு தேசத்தில் ஒளிமுத்துக்கள்
பார்வை அற்றவனுக்கு
சிலநொடிப்போழுது மட்டும்
பார்வை கிடைத்த மகிழ்ச்சி போல்,
நிழல் என்று தெரிந்தும்
நிஜமாய் உணர்க்கிறேன்
வானத்தில் நிலைக்கும் விண்மீனாய்
மாற கோருகிறேன்.
No comments:
Post a Comment