Tuesday, October 18, 2011

என் வாழ்க்கை வாக்கியங்கள்..!

அம்மா..! என் முத‌ல் வாக்கிய‌மாய் முழு வாக்கிய‌மாய்...!

உன்னால் நான் க‌ண்ட‌ இர‌ண்டாம் வாக்கிய‌மாய்

க‌ல‌ங்க‌ரை விள‌க்காய் என் வாழ்க்கைக்கு அடைக‌ல‌மாய் அப்பா..!

உற்ற‌ உற‌வாய் உண‌ர்வாய், உட‌ன்பிற‌ந்த‌வ‌ள் என்னும்

உன்னால் நான் கொண்ட‌ ம‌ற்றோரு வாக்கிய‌ம்...!

ம‌கிழ்ச்சியையும் சோக‌த்தையும் ஒன்றாய் கொட்டிக் கொண்டாட‌

ந‌ண்ப‌ர்க‌ள் என்னும் திருவாக்கிய‌ம்....!

உட‌ன்பிற‌ந்த‌வ‌ளின் இன்னோருர் உயிராய்

என்னை நோக்கி பிஞ்சு கை நீட்டும்

ஒர் இனிய‌ வாக்கிய‌ம்...!

என் ம‌ன்ற‌ம் வ‌ந்த‌ ம‌ழைக் காற்றாய்

என்னை எப்போழுதும் த‌ழுவிச் செல்லும் என்றும்இத‌மாய்

முத்த‌மிழ் ம‌ன்ற‌ம் என்னும் பெரும் வாக்கிய‌ம்...!

No comments:

Post a Comment