Wednesday, October 19, 2011

பரிசுப் பொருள்:


நீ சேர்க்க முடியாவிட்டால் என்ன..?
நான் சேர்க்க முயல்கிறேன்.
உன்னை நினைத்து
காதலில் கரையும் நிமிடங்களை...

சில வேளைகளில் குதுகலிக்கவே
நேரம் சரியாக இருந்தது.
சில வேளைகளில் கோபப்படவே
நேரம் சரியாக இருந்தது.
எவ்வேளையில் உன்னை நெருங்குவது
புரியாமல் போனது எனக்கு.

பாசத்தைக் கொட்டும் நேரத்தில்
இரக்கம் காட்டினாய்.
இரக்கம் கொள்ளும் நேரத்தில்
வெருப்பைக் கொட்டினாய்.

மாற்றம் என்பது மாறாதது என்றாலும்
உன் மாற்றம் மனதை
கிழித்த வேதனை வேர்களின்
வேளைகள் அதிகம்.

அது மரமாய் வளர்ந்து
உனக்கே பூஞ்சொரியும் நந்தவனமாய்
மாறிய விந்தை வேளைகளும் அதிகம்.

காத்திருப்புக்கு கணக்கீடுகள் இருக்கலாம்
காதலோடு வாழும் மனதுக்கு
வேளைகள் வழி சொல்லாது.

உன்னால் நான் சேமித்த் நிமிடங்கள்
அனைத்தும் என் இதய அறையில்
பரிசுப் பொருட்களாய் காத்திருக்கும்
எவ்வேளையும் உனக்காக.

No comments:

Post a Comment