Tuesday, October 18, 2011

ஒர் ஏழையின் குரல்






















நிறம் மாறும் நிமிடங்களின் நுழைவாயிலில்
சில ம‌னித‌ர்களின் நிஜ‌ங்கள்
நிழ‌லாகும் மர்ம‌ம் புரிய‌வில்லை.

க‌ட‌வுளின் நீதி எது...?
க‌ண்ணீரின் மீதி எது....?
எதுவும் ச‌ம‌ர்ப‌ண‌மாகும் ப‌ண‌த்திற்கு.

விலையில்லா வேண்டுகோளுக்கு
பூசாரிக்கூட‌ ச‌ம்ம‌திப்ப‌தில்லை.

க‌ண்ணாமூச்சி ஆடுவ‌து க‌ண்ண‌ன் அல்ல‌,
இங்கு ப‌ண‌த்தை பொதியாய் சும‌க்கும்
க‌ழுதைக‌ளின் கூட்ட‌ம் ம‌ட்டுமே...

இர‌ஞ்சுகிறேன் இனிய‌வை வேண்டுமென்று
வ‌ரைய‌றுக்கப்ப‌ட்ட‌ வாழ்க்கை என‌ அறியாம‌ல்.

நிவார‌ண‌ம் கோரி...கோரி...
நிச‌ப்த‌மான‌து நிமிட‌ங்க‌ள்

மொள‌ன‌த்திலும் மொழிக‌ள்
உண்டு என அறியாம‌ல்.

No comments:

Post a Comment