Monday, October 10, 2011

கிளை முறிந்த மரங்கள்




















இந்த கவிதை, கவிதைப் போட்டிக்காக தேசிய ஒருமைப்பாட்டை
அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.



கண்டம் கண்டமாய் பிரித்தாளும் கொள்கையில்

பிரிந்த்தது நம் தேசமும்.

கேட்டது கிடைத்தது...ஆள்பவர்களுக்கு

நம் கூக்குரல் புதைந்தது பிளவுகளின் பள்ளத்தில்..

தனி மரம் தோப்பானது சுதந்திரம் வேண்டி

மரங்களின் தூளியில் துயில் கொண்ட நேரம்..

கிளை முறிந்த மரங்களாய் வீழ்ந்துதான் போனோம் வெற்றிக்குப் பிறகும்

சுதந்திர மயக்கத்தில் கிளை முறிந்த மரங்களை விட

கிளைகளை முறித்த மரமாய் ஆனோம்.

No comments:

Post a Comment