Tuesday, October 18, 2011

சுமை



நாட்காட்டியை போல் நாட்களை தாங்குகிறேன்

நாட்களை சுமக்கும் நாட்காட்டிக்கு வலிக்கவில்லை

ஏனோ எனக்கு வலிக்கிறது அதனை கடந்து செல்ல.

மாதங்கள் அனைத்தும் நாட்களை சுமப்பது போல்

என் எண்ணங்கள் அனைத்தும் உன்னை சுமக்கின்றனவே.

நீரில் முழ்கிய நிமிடங்களையும்

நெருப்பில் வெந்த நிமிடங்களையும்

கொடுத்த நாட்களைப் பார்த்த பின்புதான் தெரிந்தது

இவையெல்லாம் நான் சுமந்தது வெற்றுச் சுமை என்று.

எரிந்துபோன என் நிமிடங்களின் சாம்பலைக்கூட

சுமக்கவில்லை காலம்

என் முடிவோடு கொண்டு போனது காற்றாக....

No comments:

Post a Comment