Tuesday, October 18, 2011

விழித்தெழு





















விழி எங்கும் வீண்கவலை வித்திட்ட
கண்ணீர் முத்துகளை
வசந்த மாலையாக்கு

உழைப்பால் உயிர் கொண்டு
உதிர்ந்த‌ உன் விய‌ர்வையை
சூரிய‌க் கதிர் கொண்டு
வைர‌க்க‌ல் சாலையாக்கு

க‌ன்னிய‌மாய் க‌ரைபுர‌ண்டோடும்
உன் ர‌த்த‌த்தை க‌ரைப‌டிய‌விடாம‌ல்
க‌ல‌ங்க‌ரை விள‌க்காக்கு.

உன்னில் நீயே உருவாக்கிக்கொள்ள‌ முடியும்
உயர்ந்த‌ ம‌னித‌னை

உதார‌ணத்தை உல‌கில் தேடாதே
உன்னில் தேடு.

No comments:

Post a Comment