Tuesday, October 18, 2011

நட்பின் வருகை

என் வாசல் கிளிஞ்சல்களின் சத்தம்

உன் வருகையை வரவேற்று

கடனுக்குக் கூட கண்ணீர் மிச்சமின்றி போனது

உன் பூமுகத்தை பார்த்து

வசந்தகாலம் வாசல் வந்தது

புன்னகை பூத்து

என்னுள் நுழைந்துவிட்டாய் இதயம் துடிக்கும்

இனி உனக்கும் சேர்த்து

வா காலம் முழுவதும் கை கோர்ப்போம்

காலனையும் விலைக்கு கேட்போம் சேர்ந்து.

No comments:

Post a Comment