Wednesday, October 19, 2011

மலட்டுத்தாயின் மகவு




சேற்றுச் செந்தாமரை நீ

இறைவனின் இரக்கம் நீ

நிலவின் நிழலாய்

கனவின் கருவாய்

என் இதய வாசலில் கால் பதித்தாய்

பாலைவனத்திலும் வானவில்லின்

எட்டாவது வர்ணமாய்

நீ தவழும் அழகைப் பார்த்திருப்பேன்

என் தலை சாயும் வரை உடன்வா...

வாழ்ந்து தான் பார்போம்.

வாழ்க்கையின் எதிரெதிர் துருவங்கள்

சேரும் போது சுபமாகட்டும் இங்கே...!

2 comments:

  1. கவிதை அருமை சுப்பர்

    ReplyDelete
  2. பாராட்டிற்கு நன்றி ஹிஷாலீ!

    ReplyDelete