Saturday, October 1, 2011

மறந்து போனேன் மறுத்துத்தான் போனேன்....


மறந்து போனேன் மறுத்துத்தான் போனேன்....
உன்னை நினைக்க அல்ல
உன் நினைவுகளை....

பேச மறந்த வார்த்தைகளும்,
மறுத்த மொளன சாதிப்புகளும்
அவரவர் நியாயங்களை நிரப்ப முடியாமல் போனது அசந்தர்பமாக.

காலம் கடந்த ஞாயாபகமாய்
என் விழியோரத்தில் உன் நினைவுத்துளிகள்
கண்ணீராக.

என் வாசலில் உன்னை வரவேற்று
என்றோ போட்ட கோலம் இன்று சிரிக்கிறது
என்னை பார்த்து அலங்கோலமாக.

என் இதயத்தில் உன் நினைவுகள்
திரைசீலையின் நைந்த மடிப்புகளின்
கிழிசல்களாக.

கை நிரைத்த வளையல்கள்
கண்ணாடித்துண்டாய் கையை கிழிக்க,
மனம் நிறைந்த வாழ்கையில்
மனதை கிழித்தாய் எளிதாக.

இவையெல்லாம் உன் பிரிவில்
நான் வாழும் வாழ்கையின் உதாரணங்கள்
பிடிப்பில்லாமல் அல்ல பிணமாக.

2 comments:

  1. என்ன சொல்ல..!

    கவிதை நல்லாயிருக்கு

    மூலத்தில் பல இடங்களைச் சரிபார்க்கவும்.


    நன்று

    ReplyDelete
  2. கருத்திற்கு நன்றி சிவா!

    ReplyDelete